Skip to main content

விருத்தாசலத்தை தலையிடமாகக் கொண்டு புதிய  மாவட்டம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்! 

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில், விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி,நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளை  பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய  மாவட்டம் அமைக்க கோரியும் , விருத்தாசலம் கோட்டத்தில் இருந்து எந்த ஒரு பகுதியையும் பிரிக்கவோ,  கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் சேர்க்கவோ கூடாதென வலியுறுத்தியும் விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது
 

p

 

அதன் ஒரு பகுதியாக  விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.  இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தங்க.தனவேல் தலைமை தாங்கினார்.  நிர்வாகிகள் கந்தசாமி,   வெற்றிவேல்,  சோழர் கூடம் பிரவின்ராஜ், வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வேலய்யன் வரவேற்புரை வழங்கினார்.

 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழந்தை.தமிழரசன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார்.  அ.திமு.க முன்னாள் ஒன்றிய சேர்மன் சுந்தரராஜன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் நகர் பெரியசாமி, பாமக மாநில மகளிர் சங்க செயலாளர் மருத்துவர் தமிழரசி, ம.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் செளந்தர்ராஜன்,  நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கதிர்காமன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரச் செயலாளர் சேகர், பா.ஜ.க மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார், திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சிங்காரவேல்,  வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன்,  இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் மங்காப்பிள்ளை, முஸ்லிம் சமூதாய முன்னேற்ற சங்கம் சத்தார் பாஷா  ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  மருத்துவர் கோவிந்தசாமி  போராட்டத்தை  முடித்து வைத்தார். உண்ணாவிரதத்தில் விழிப்புணர்வு இயக்கத்தை சேர்ந்த மதியழகன், சுரேஷ், ராமர், ராஜ்குமார், இளமங்கலம் மதியழகன் மற்றும் பொதுமக்கள், விவசாய சங்கத்தினர்,  சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இறுதியாக தமிழன் பிரபாகரன் நன்றி கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .