Skip to main content

வைரலான புகைப்படம்! காவலருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Viral photo! Shock waiting for the guard!

 

தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் எனும் நடைபயணத்தின் இரண்டாம் கட்டத்தை துவக்கி நடத்திவருகிறார். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 28ம் தேதி அவர் நடைப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது அண்ணாமலை, “இந்தியா முழுவதிலும் இருந்து, ஊட்டி நோக்கி மக்கள் பயணம் வருகிறார்கள். ஆனால், ஊட்டி மக்களுடைய பிரச்சனைகளைக் காலம் காலமாக இருக்க கூடிய அரசியல் கட்சிகள் தீர்க்கத் தவறி விட்டனர். ஆளுங்கட்சி சம்பாதிப்பதற்காக மட்டுமே திட்டங்கள் போடுகிறார்கள். சுற்றுலா பயணிகள் வாகனங்களுக்கு சரியான வாகன நிறுத்த வசதிகள் செய்யவில்லை. ஊட்டி நகராட்சியில் சொத்து வரி கட்டணம் மிக மிக அதிகம். இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும். 

 

நீலகிரி எம்பி ஆ.ராசா, நீலகிரியின் பிரச்சனைகளைப் பேசமாட்டார். தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனையைப் பேசமாட்டார். படுகா மக்கள் பிரச்சனைகளைப் பேசமாட்டார். மனித விலங்கு மோதல் குறித்துப் பேச மாட்டார். மின்சாரம் இல்லாம பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. அதைப் பத்தி பேசமாட்டார். ஆனால் பேசுவது அனைத்துமே, சனாதன தர்மத்திற்கும் இந்து தர்மத்திற்கும் எதிராக மட்டுமே. ஒரு பகுதி நேர பாராளுமன்ற உறுப்பினராக, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நீலகிரிக்கு சுற்றுலா பயணியாக வருகிறார். சனாதனம் என்பது தொழுநோய், இந்துக்கள் என்று சொன்னாலே விபச்சாரியின் மகன் இவைதான் ஆ.ராசா உதிர்த்த முத்துக்கள். 

 

வரும் 2024 பாராளுமன்ற தேர்தல் ராசாவை, நீலகிரி மக்கள் டெபாசிட் இழக்கச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீலகிரியில் இருந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினரை நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும். நமக்கென்று நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர் வரும்பொழுது இந்த வளர்ச்சி என்பது இன்னும் வேகப்படுத்தப்படும். வளர்ச்சித் திட்டங்கள் இரண்டு மடங்கு மூன்று மடங்காக செய்ய முடியும். தீர்க்க முடியாத பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். 

 

திராவிட முன்னேற்ற கழகம் எனும் தீய சக்தியை முழுமையாக தமிழகத்தில் இருந்து அடியோடு வேரோடு மண்ணோடு சாய்க்க வேண்டிய நேரம் இது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறை 400 எம்பிக்களுடன் ஆட்சி அமைக்கும்போது, தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்கள் அனுப்பி வைப்போம் என்கிற நம்பிக்கை நமக்கிருக்கிறது. அதுவரை அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டுமென்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில், இந்தப் பயணத்தின் போது தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையுடன் போக்குவரத்து சீரமைப்பு காவலர் கணேசன் என்பவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனை அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும், இந்தப் புகைப்படம் வேகமாக பரவியது. இதனையடுத்து அரசுப் பணி விதிமுறைகளை மீறியதாகப் போக்குவரத்து காவலர் கணேசன், ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.