Skip to main content

வாய்க்கால்களில் விநாயகர் சிலைகளை கரைக்க கூடாது; ஈரோடு விவசாயிகள் அமைப்பு வேண்டுகோள்

Published on 05/09/2018 | Edited on 05/09/2018

 

idol

 

 

 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக கீழ்பவானி, காளிங்கராயன் மற்றும் தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு மூன்று பிரதான வாய்க்கால்கள் மற்றும் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் பாசனம், கால்நடைகளுக்கு குடிநீர், பொதுமக்கள் பயன்பாடு என உள்ளது. இந்த வாய்க்கால்களில் விநாயகர் சிலைகளை கரைக்க கூடாது என்று ஈரோடு மாவட்ட விவசாயிகள் போர் கொடி தூக்கியுள்ளார்கள்.

 


இன்று ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்த விவசாய சங்க பிரதிநிதிகள் விநாயகர் சிலைகளில் கொடிய கெமிக்கல்  ரசாயண பூச்சு உள்ளது. இந்த சிலைகளை வாய்க்கால் நீரில் கரைத்தால் நீர் விஷத்தன்மையாக மாறும் ஆகவே இச்செயலை செய்யும் நபர்கள், அமைப்புகள், குறிப்பாக இந்து முன்னனியினர்களை கண்கானிக்க வேண்டும் மீறி சிலைகளை வாய்க்காலில் கரைத்தால் அவர்களே தண்ணீரை சுத்தப்படுத்துவதோடு அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றனர்.  

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசு சார்பில் தொல்காப்பியர் உருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Flower salutation program for Tolkappiyar statue

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891- இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும்.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது. ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது.

இந்நிகழ்ச்சி சித்திரை முழுமதி நாளான இன்று (23.04.2024) காலை 10.00 மணிக்கு சென்னை மெரினா எதிர்புறம் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் (திருவள்ளுவர் சிலை எதிர்புறம்) அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அரசு செயலாளர், தமிழறிஞர்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுச் சிறப்பிக்க உள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. 

Next Story

பேருந்து நிலையத்தில் உள்ள சிலைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
court order to remove idols from bus stand

பேருந்து நிலையத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேருந்து நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை அகற்றக்கோரி தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகி  ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஜெயலலிதாவின் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகத் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இந்த மனு இன்று (13.03.2024) விசாரணைககு வந்தது.  அப்போது, “வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார், காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். உள்ளிட்ட அனைத்து தலைவர்களின் சிலைகளையும் அகற்ற வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது” என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.