Skip to main content

பெட்ரோல் பங்க் மேலாளர் கொலையின் எதிரொலி... இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்... டிஎஸ்பி, எஸ்பி-க்கு நோட்டீஸ்...!

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு திருநகர் பகுதியில் பிரகாஷ் என்பவர் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். அவரது அலுவலகத்தில் இருந்த பங்க் மேலாளர் சீனிவாசனை கடந்த 4ஆம் தேதி அசார் தலைமையிலான ரவுடி கும்பல் ஒன்று வெடிகுண்டு வீசி பட்டப்பகலில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் விழுப்புரம் மக்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராபின்சன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து டவுன் டிஎஸ்பி சங்கர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகிய இருவரிடமும் விழுப்புரம் மண்டல டிஐஜி சந்தோஷ்குமார் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

Villupuram Petrol Punk issue - Inspector suspend

 



ஏற்கனவே நகரில் கள்ளத்தனமாக லாட்டரி சீட்டு விற்பனை கொடிகட்டி பறந்தது. அதனால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது. இதே போன்ற குற்ற சம்பவங்கள் விழுப்புரம் நகரில் அதிகரித்து வருகின்றன. விழுப்புரம் அருகே கல்பட்டு என்ற ஊரின் அருகில் பெண்ணையாற்றில் தினசரி மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட செயல்களை எல்லாம் தடுத்து நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை மெத்தனமாக உள்ளது என்கிறார்கள் விழுப்புரம் நகர மக்கள்.

இதன் எதிரொலியாக டிஐஜி சந்தோஷ் குமார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். மாவட்டத்தில் காவல்துறை மற்றும் வருவாய் துறையில் பல மாவட்டங்களிலிருந்து இங்கே பணி மாறுதல் பெற்று பணிக்கு வந்தவர்கள் இங்கேயே சின்ன சின்ன பதவிகளில் இருந்து மேல்மட்ட அதிகாரிகள் வரை பதவி உயர்வு பெற்று இங்கேயே சொந்தமாக வீடு கட்டிக் கொள்ளும் சொத்துக்கள் வாங்கியும் செட்டில் ஆகி உள்ளனர். இப்படிப்பட்டவர்கள் சம்பாதிப்பது மட்டுமே குறியாக உள்ளனர். மக்களைப்பற்றி குற்றச் சம்பவங்கள் பற்றி அதைதடுப்பதற்கு சரியான நடவடிக்கை எடுப்பதில்லை.

 



எனவே மாவட்டம் முழுவதும் உள்ள இரண்டு துறை அதிகாரிகளை பல்லாண்டு காலம் மாவட்டத்திலேயே பணி செய்பவர்களை கணக்கெடுத்து அவர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் செய்தால் போதும் இது போன்ற சம்பவங்கள் தடுக்கப்படும். புதிதாக பணிக்கு வருபவர்கள் விரைந்து சரியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. அரசும் மேல்மட்ட அதிகாரிகளும் இதை செய்து மாவட்டத்தில் அமைதி திரும்ப வழி செய்வார்களா? என்பது பெரிய கேள்வியாக உள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.