Skip to main content

விவசாய நிலத்தில் சங்கராபுரம் என்கிற பெயரில் சொகுசுகுடில்; வாழ்வாதாரம் பறிபோவதாக பொதுமக்கள் தேர்தல் புறக்கணிக்க முடிவு

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

திருப்பனந்தாள் அருகே விளைநிலங்களை தரிசாக மாற்றுவதால் வாழ்வதாரம் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக அக்கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

 

Thanjavur

 

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள விவசாய உட்கிராமம் கூத்தனூர். அங்கு உக்கடை என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை சென்னையை சேர்ந்த சிலர் அடிமாட்டு விலைக்கு வாங்கி தரிசாக மாற்றி சங்கராபுரம் என்கிற பெயரில் சொகுசு குடில்கள் அமைத்துவருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குடியாளம், கூத்தனூர், உக்கடை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள், விவசாயத்தினக்கூலிகள்  "எங்களின் வாழ்வாதாரமே விவசாயம் தான், அதை திட்டமிட்டு அழித்துவிட்டு, இயற்கை கலந்த சொகுசு குடில்கள் அமைத்து எங்களை வெளியேற்ற முயற்சிக்கின்றனர்" என்றுகூறி கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட்டு கேட்டனர்.
 

அதற்கு "உக்கடை கிராமத்தில் சங்கராபுரம் என்னும் பெயரில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் கடந்த 5 வருடங்களாக குடியிருப்பு கட்டுமான பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது". என மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.

 

இந்தநிலையில் தான் பொதுமக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அக்கிராம மக்களிடம் விசாரித்தோம், "ஏற்கனவே கதிராமங்கலத்தில் விளை நிலங்களை குறிவைத்து மீத்தேன் எடுக்க முயற்சிக்கிறாங்க. பாதிப்பு ஏற்படுத்திய ஓஎன்ஜிசி நிறுவனத்தை எதிர்த்து அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
 

இந்தநிலமையில் அதே பகுதியில் உள்ள கொடியாளம், கூத்தனூர் , உக்கடை, ஆகிய கிராம மக்களுக்கு சங்காபுரம் திட்டம் என்கிற பெயரில் விளை நிலங்களை தரிசாக்கி கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. எங்க மக்களுக்கு விவசாய வேலையை தவிர வேறு தொழில் தெரியாது, தொழிலும் கிடையாது. எங்களை அப்புறப்படுத்த திட்டமிட்டுவிட்டனர்.
 

இங்குள்ள நத்தம், புறம்போக்கு பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நாற்பது  ஆண்டுகளுக்கு மேலாக  இடம் நெருக்கடியில் இருக்கிறோம்.  எங்களுக்கு பட்டா கொடு என கொட்டகை அமைத்து எதிர்ப்பு தெரிவித்தோம், தகவல் அறிந்த கூத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் விவேக் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
 

அப்போது  கிராம நிர்வாக அலுவலரை பொதுமக்கள் முற்றுகையிட்டு எங்களது வாழ்வாதாரம் பாதிப்பு அடைந்துவிட்டது, வேலைவாய்ப்பு பறிபோகிறது, எனவே இங்குள்ள நத்தம், புறம்போக்கு பகுதியில் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். என்று கோரிக்கை விடுத்தோம்.
 

 இதற்கிடையில் திருவிடைமருதூர் தாசில்தார் சிவக்குமாரும் வருவாய் அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். இது பட்டாவில் வருகிறதா அல்லது  நத்தம் புற போக்கு பகுதியில் வருகிறதா என வருவாய் துறையின் ஆய்வுக்கு தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.
 

எங்களது கோரிக்கை  மூன்று கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு  வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் .இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மூன்று கிராம மக்களை திரட்டி, வருகிற பாரளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு மற்றும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடத்துவோம்" என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.