Skip to main content

இளைஞர்களின் திடீர் போராட்டம் - இழுத்து சென்ற போலீஸ்

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

 

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையம் முன்பாக மே 21 ந்தேதி காலை 10 மணியளவில், திடீரென முன்னாள் கல்லூரி மாணவர்கள் 4 பேர், தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் உட்பட சில மாவட்டங்களில் 100  இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய பாஜக, அதிமுக அரசை கண்டித்து, பதாகைகளை கையில் ஏந்தி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

h

 

போராட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.  ஏராளமான மக்கள் சுற்றி நின்று பார்த்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் நகர போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 4 இளைஞர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

h

 

அந்த 4 இளைஞர்கள் மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்