Skip to main content

பதவி ஆசை காட்டி திருமாவளவன் காலை நக்கியது ஏன்? எச்.ராஜாவுக்கு வி.சி.க. மா.செ. கேள்வி

Published on 12/12/2018 | Edited on 12/12/2018
h.raja



திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொட மாட்டார்கள் என்று தெரிந்து வைத்துள்ள பாஜக, எதற்காக அவரை எப்படியாவது தொட்டுவிட வேண்டும் என துடித்தது? எதற்காக தொடக்கூடாத திருமாவளவனுக்கு பதவி ஆசை காட்டி அவரது காலை நக்கியது? என எச்.ராஜாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் ந.செல்லதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

 

நிதானமிழந்த சனாதனம்! வெற்றிப்பாதையில்_ஜனநாயகம்! என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

"திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொட மாட்டார்கள்" என்று பாஜக எச்.ராசா பேசியிருப்பது, மிகவும் மலிவான, தரம் தாழ்ந்த, ஜனநாயக விரோத, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய பேச்சு.
 

 

எச்.ராசாவின் இந்த கீழ்த்தரமான பேச்சை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. ஜனநாயகத்தை மதிக்காமல், மனுவின் கோட்பாட்டை மதித்து செயல்படும் சமூகவிரோதியான எச்.ராசாவை, தமிழகத்தின் எந்த மாவட்டங்களிலும் சுதந்திரமாக நடமாட விடமாட்டோம். ஜனநாயக ரீதியில் எங்களின் அனைத்து விதமான எதிர்ப்புகளையும் வெளிப்படுத்துவோம். 

 

ஆதிக்க புத்தி கொண்ட எச்.ராசாவால், எங்கள் தலைவரின் வளர்ச்சியையும், அவரது உறுதியான சனாதன எதிர்ப்பையும், மதவாத சக்திகளோடு சமரசம் செய்து கொள்ளாத  அவரது நிலைப்பாட்டையும், தமிழகத்தில் சாதிவெறி சக்திகளை தனிமைப்படுத்தி, வெகுஜன மக்களின் ஆதரவைப் பெற்று நம்பிக்கை நாயகனாக பரிமாணம் பெற்று வருவதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரால் இதை தடுக்க முடியாத நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடைய நிதானத்தை இழந்து, இப்படி வாய்க்கு வந்தபடி பேசுகிறார். 

    

கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக எங்கள் தலைவரை, பாஜக தங்களின் பக்கம் இழுத்துக் கொள்ள எத்தனை முயற்சிகள் எடுத்தது என்றும், தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த பிறகும் கூட, தமிழக பாஜகவைச் சார்ந்த மத்திய அமைச்சர் மூலம் தொடர்ந்து நடைபெற்ற பகீரத முயற்சிகள் பற்றியும் இந்த எச். ராசாவுக்கு எப்படி தெரியாமல் போனது? 

  

திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொட மாட்டார்கள் என்று தெரிந்து வைத்துள்ள பாஜக, எதற்காக அவரை எப்படியாவது தொட்டுவிட வேண்டும் என துடித்தது? எதற்காக தொடக்கூடாத திருமாவளவனுக்கு பதவி ஆசை காட்டி அவரது காலை நக்கியது? எதற்காக அழையா விருந்தாளியாக அசோக் நகருக்கு வந்து பொன்னாடை போர்த்தி பல்லை இளித்தது? அப்போது கூட பக்குவமாக பதில் சொல்லி புன்னகையுடன் வழியனுப்பி வைத்தார் திருமாவளவன். 

       

எழுச்சித்தமிழர் மிகச்சிறந்த பண்பாளர். எச்.ராசா போல இழிபிறவி அல்ல. பாஜக தொட்டுவிடத் துடித்தது திருமாவளவனை. ஆனால் அவர் பாஜகவைத் தொடவில்லை. அதுதான் நிஜம். பாஜகவின் பாசிச கைகளுக்கு எட்டவில்லை என்றவுடன் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று பேசும் எச்.ராசாவே நினைத்தாலும் தொட முடியாத உயரத்தில் இருப்பவர் திருமாவளவன். 

 

எந்தக் காலத்திலும் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர் அவர். சனாதன சக்திகளின் சதிகளை முறியடித்து புரட்சிகர ஜனநாயகத்தை வென்றெடுக்க சபதம் ஏற்றுள்ள மக்கள் தலைவர். எச்.ராசா நிதானத்தை இழந்து நிற்பதில் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் பாஜக எனும் மதவாத சக்தி மக்கள் மன்றத்தில் தோல்வியைத் தழுவி வருகிறது. 

 

தோற்பவன் நிதானத்தை இழப்பது நியாயம் தான். ஆனால் எழுச்சித்தமிழர் தனது பண்பட்ட நடவடிக்கைகளாலும் உயர்வான கொள்கைகளாலும் மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்று வருகிறார். நாளைய தலைமுறையை வழிநடத்த தகுதியான தலைவராக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறார். எனவே வெற்றிப் பாதையில் பயணிக்கும் எழுச்சித்தமிழர் நிதானம் இழக்க மாட்டார். அவரோடு பயணிக்கும் கொள்கைப்புரிதல் உள்ள அவரது தம்பிகள் நாங்களும் நிதானத்தை இழக்க மாட்டோம். 

 

ஆனால் ஜனநாயக விரோத, சமூகவிரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிற எச்.ராசாவை ஜனநாயகம் அனுமதிக்கிற அனைத்து விதமான எதிர்ப்புகளின்  மூலமும் நிலைகுலையச் செய்வோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்போம். ஆதிக்த்தை வேரறுப்போம். சமத்துவத்தை நிலைநாட்டுவோம். எழுச்சித்தமிழர் வழிநடப்போம்.   இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.