Skip to main content

விருத்தாசலத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய 5000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது!  

Published on 21/02/2019 | Edited on 21/02/2019

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த  அகரம் ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர் தனது   சொந்த நிலத்திற்கு பட்டா பெயர்  மாற்றம் அவ்வூர் கிராம நிர்வாக அலுவலரான ஆனந்தராஜ் (வயது 30) என்பவரிடம் கேட்டுள்ளார். அதற்கு விஏஒ பட்டா மாற்றம்  செய்ய  ரூ. 40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.  இது குறித்து செந்தில் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலிசாரிடம் புகார் கூறியுள்ளார். 

 

v

 

பின்னர் லஞ்ச ஒழிப்பு  போலீசார் கூறியபடி  விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்  உள்ள கிராம நிர்வாக அலுவலர் சங்க அலுவலகத்தில் அமர்ந்திருந்த ஒட்டிமேடு கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தராஜிடம்  அட்வான்ஸ் தொகையாக  ஐந்தாயிரம் ரூபாயை  லஞ்சமாக  கொடுத்தார்.

 

அப்போது அங்கு மறைந்திருந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஒ ஆனந்தராஜை கையும் களவுமாக பிடித்து  கைது செய்தனர். விஏஒ ஆனந்தராஜ் சொந்த ஊர் விருத்தாசலம் அருகிலுள்ள  கம்மாபுரம், அவரது தந்தை பாலகிருஷ்ணன் கிராம நிர்வாக உதவியாளராக  பணியாற்றி கொண்டு இருந்தபோது இறந்துவிட்டார்.  


தந்தை இறந்ததால் வாரிசு அடிப்படையில் வேலைக்கு வந்துள்ளார் ஆனந்தராஜ்.    கைது செய்த விஏஒவை  போலிசார் மேலும் விசாரணைக்காக  கடலூர் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

லஞ்ச வழக்கில் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர் கைது

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Village administration officer arrested in bribery case

திருச்சி அருகேயுள்ள முசிறியில் லஞ்ச வழக்கில் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார்  கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் கண்ணன். அவரது நிலத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தை நாடினார். பட்டா பெயர் மாற்றம் செய்ய துணை வட்டாட்சியர் தங்கவேல், ரூ. 25,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில், 27.12.2023 அன்று அவரிடம் லஞ்சப் பணம் கொடுத்தபோது, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் துணை வட்டாட்சியர் தங்கவேலை கைது செய்தனர்.

இந்த வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் விஜயசேகருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஆனால் அவர் தலைமறைவானதைத் தொடர்ந்து தேடி வந்த நிலையில், விஜயசேகரை வியாழக்கிழமை(21.3.2024) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Next Story

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ; கையும் களவுமாக கைது செய்த போலீஸ்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
VAO arrested for taking Rs 1000 lakh from agricultural labourer

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சித்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் வையாபுரி(51). இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தங்கை காந்திமதி. இவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். காந்திமதி கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு வையாபுரி, மணப்பாறை வட்டம் செட்டி சித்திரம் கிராமத்தில் 1200 சதுர அடி கொண்ட காலி மனை ஒன்றினை ஒரு லட்ச ரூபாய்க்கு கடந்த 21.2.2024 அன்று வாங்கியிருக்கிறார்.

இவர்கள் வாங்கிய காலி மனைக்குரிய பட்டா பெயர் மற்றும் தொடர்பான ஆவணங்கள் ஆன்லைன் மூலமாக சம்பந்தப்பட்ட சித்தநத்தம் வி.ஏ.ஓ அலுவலகத்திற்கு சென்றுள்ளது. அதன் பேரில் சமுத்திரம் வி.ஏ.ஓ. கூடுதல் பொறுப்பு சித்தாநத்தம் வி.ஏ.ஓ.வாக உள்ள சிவ செல்வகுமார்(41) என்பவர் வையாபுரியை தொலைபேசியில் அழைத்து பட்டா பெயர் மாற்றத்திற்கு உண்டான ஆவணங்களை எடுத்து வருமாறு கூறியுள்ளார். 

அதன் பேரில் வையாபுரி கடந்த 1.3.2024 மதியம் பட்டா பெயர் மாற்றத்துக்கு உண்டான ஆவணங்களை எடுத்துக் கொண்டு சித்தாநத்தம் வி.ஏ.ஓ அலுவலகம் சென்று அங்கிருந்த வி.ஏ.ஓ. சிவ செல்வகுமாரை சந்தித்து ஆவணங்களை கொடுத்துள்ளார். ஆவணங்களை சரிபார்த்த பின்னர் வி.ஏ.ஓ செல்வகுமார் தனக்குத் தனியாக 2000 ரூபாய் கொடுத்தால் பட்டா பெயர்மாற்றம் செய்வதற்கு உடனடியாக பரிந்துரை செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். அதற்கு வையாபுரி தான் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறேன் என்று கெஞ்சி கேட்டதால், வி.ஏ.ஓ சிவ செல்வகுமார் தான் கூறிய தொகையில் பாதியை குறைத்து கொண்டு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்து தர முடியும் என்று கண்டிப்பாக கூறியுள்ளார்.  

லஞ்சம் கொடுக்க விரும்பாத வையாபுரி, திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகாரின் பேரில் டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் குழுவினருடன் இன்று (5.3.2024) மதியம் 12 மணியளவில் சமுத்திரம் வி.ஏ.ஓ அலுவலகம் சென்று, சிவ செல்வகுமார் வையாபுரியிடமிருந்து 1000 ரூபாய் லஞ்ச பணத்தை பெற்ற போது, கையும் களவுமாக பிடித்தனர். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணை நடைபெற்று வருகிறது.