Skip to main content

22 இல்லை 250 தலைவர்கள் ஒன்று கூடினாலும் முடியாது: வானதி சீனிவாசன் பேட்டி

Published on 19/01/2019 | Edited on 19/01/2019
Vanathi Srinivasan



மத்திய பாஜக அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் நடைப்பெற்ற கூட்டத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் 22 பேர் பங்கேற்று பேசினர். 
 

மோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. மோடி அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. மோடி அரசு நாட்டை அழித்துவிட்டது. மோடி ஆட்சியில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. நாட்டின் தேவையைக் கருதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்று மம்தா பானர்ஜி பேசினார். 
 

பாஜகவை அகற்றுவதே எங்கள் நோக்கம். மோடிக்கு பதிலாக நாட்டுக்கு ஒரு புதிய பிரதமர் கிடைப்பார். எங்கள் கூட்டணியில் யார் பிரதமர் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வர்கள் என்று அந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசினார்கள்.
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், 
 

இவர்களை ஒன்றிணைக்கக்கூடிய கோஷமாக மோடி எதிர்ப்பு கோஷம், பாஜக எதிர்ப்பு கோஷம் இன்று இருக்கலாம். ஆனால் இவர்களுடைய நம்பகத்தன்மைப் பற்றி, குடும்பக் கட்சிகளைப் பற்றி மக்கள் நன்கு அறிவார்கள். இங்கிருந்துகூட திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்துவிட்டு மம்தா பானர்ஜி அழைத்தவுடன் அங்கு செல்கிறார் என்றால், இவர்களைப் பொறுத்தவரை மோடி எதிர்ப்பு என்பதுதான் பிரதானமாக இருக்கிறதே தவிர, இந்த ஆட்சிக்கு மாற்றாக ஒருங்கிணைந்த ஒரு வலுவான ஆட்சியைத் தரக்கூடிய சிந்தனை என்பது இல்லை.
 

வெறுப்பின்பால் ஏற்பட்ட அரசியல் என்பது ஒருபோதும் இந்திய மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது இல்லை. ஒரு தனிநபரை சுற்றி மட்டுமே இந்திய அரசியலை மாற்ற முடியுமா? என அவர்கள் யோசிக்கிறார்கள். அந்த நோக்கத்திலேயே அவர்கள் சிதையுண்டுபோவார்கள். 
 

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெறும் வெற்றிகளாகட்டும், வாக்கு சதவீதம் உயர்ந்ததாகட்டும் அல்லது பாஜகவுக்கு அங்கு மக்கள் கொடுக்கக்கூடிய ஆதரவும், மம்தா பானர்ஜியை கலங்கடிக்கிறது. அவர் பாஜகவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டின் வாயிலாக தன்னுடைய ஆட்சியில் நடக்கின்ற அவலங்களை மறைக்கப் பார்க்கிறார். சட்டம் ஒழுங்கில் இருந்து ஆரம்பித்து மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு ஒரு தோல்வியுற்ற அரசாங்கமாக இருப்பதை மறைப்பதற்காக மற்ற தலைவர்களை அழைத்து அங்கு ஒரு நாடகத்தை நடத்தப்பார்க்கிறார்.
 

பாஜக கூட்டணியில் இருந்த சந்திரபாபு நாயுடு இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசியிருக்கிறார். மேலும் பல மாநிலங்களில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் விலகி வருகின்றன. பாஜகவின் கூட்டணி பலம் குறைகிறதா?
 

தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. இங்கு ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட்டு, ஸ்டாலின் அங்கு செல்கிறார். பாஜகவுக்கு எதிராக இன்று கூட்டணி அமைத்துக்கொண்டிருப்பவர்களுக்குள் என்ன குழப்பம் ஏற்படும் என்று தெரியாது. இன்று கூடிய தலைவர்கள் தேர்தல் வரை ஒன்றாக இருப்பார்களா என்பதும் தெரியாது. நம்பகத்தன்மை இல்லாத தலைவர்களெல்லாம் ஒன்றுகூடி ஒரு தனிநபருக்கு எதிராக, காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கூட்டணி அமைப்பது என்பது இந்தியாவில் வெற்றிப்பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.
 

பாஜக தனிப்பெரும்பாண்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும்கூட மற்ற கட்சிகளையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு ஒரு நல்ல ஆட்சியை கொடுத்துக்கொண்டிருக்கிறது. எங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் எந்தக் காரணத்திற்காக வெளியே சென்றிருக்கிறார்கள் என்பதை அந்தந்த மாநில மக்கள் நன்கு அறிவார்கள். கூட்டணியின் எண்ணிக்கை மட்டுமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப்போவதில்லை. 
 

22 தலைவர்கள் பங்கேற்றிருப்பதால் இந்தக் கூட்டம் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்கிறார்களே?
 

பாஜகவுக்கு எதிரான ஒரு தாக்கத்திற்கு ஒரு முயற்சியை இவர்கள் மேற்கொள்கிறார்கள். ஆனால் இன்னொருபுறம் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். 22 தலைவர்கள் இல்லை, 250 தலைவர்கள் ஒன்றுகூடி நின்றாலும் பிரதமர் மோடிக்கு இவர்கள் ஈடாகமாட்டார்கள். இந்த ஐந்து வருட காலத்தில் பிரதமர் செய்திருக்கின்ற ஒவ்வொரு தனித் தனி சாதனைகளையும் பட்டியலிட்டு நாங்கள் கொடுக்கிறோம். இதற்கு மாற்றாக என்னவெல்லாம் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில், அவர்களுடைய அரசியல் வாழ்க்கையில் செய்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் பட்டியலிடட்டும். இந்த மாதிரியான ஆரோக்கியமான போட்டிக்கு வந்தால் பாஜக அதற்கு தயாராக இருக்கும். ஆனால் இல்லாத கற்பனை கதைகளை கூறிக்கொண்டு மக்களை திசைத்திருப்ப பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.