Skip to main content

வைகோவின் பிடிவாதம் - ஈரோடு திமுகவினர்  குமுறல்

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

 

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. ம.தி.மு.க.வின் மாநில பொருளாளராக உள்ள கணேசமூர்த்தி தான் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். எதிரணியான  அ.தி.மு.க.வில் வெங்கு என்கிற மணிமாறன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

v


 இந்நிலையில் ம.தி.மு.க. வேட்பாளர் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இன்று அறிவித்துள்ளார். ம.தி.மு.க.விற்கு ஏற்கனவே இருந்த பம்பரம் சின்னம் இல்லை என்ற நிலை வந்த போதே, ஈரோடு திமுகவினர் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் வேட்பாளர் கணேசமூர்த்தியை சந்தித்து நீங்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள். தனியாக சுயேச்சை சின்னம் என்றால் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வது மிகுந்த சிரமம். மேலும் அ.தி.மு.க. மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை இப்போது நமது கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. இந்த நிலையில் நம்மை எதிர்த்துப் போட்டியிடும் அ.தி.மு.க. இரட்டை இலையில் நிற்கிறது.

 

மக்களின் எதிர்ப்பு ஓட்டுக்கள் நமது கூட்டணிக்கு அப்படியே வரவேண்டும் என்றால்  சின்னம் முக்கியம். இரட்டை இலைக்கு எதிராக எந்த சின்னம் இருக்கிறது என்று மக்கள் தேடிப் பார்க்கும் போது ஏற்கனவே அறிமுகமான சின்னமாக இருக்க வேண்டும். அதன்படி உங்களின் பம்பரம் சின்னம் இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதற்கு அடுத்தபடியாக உதயசூரியன் சின்னம் என்றால் நாம் வெற்றியை சுலபமாகப் பெறலாம். தனி சின்னம் என்று சுயேச்சை சின்னத்தில் நின்றால்  வெற்றி என்பது மிகுந்த சிரமம். இதை  மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியிடம் விரிவாக விளக்கியதோடு, திமுக தலைமையிடமும் இந்த கருத்தை கொண்டு கொண்டுசென்றனர்.


 திமுக தலைமையும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அழைத்து ஈரோடு தொகுதியில் உள்ள நிலவரத்தை சொல்லி உதயசூரியன் சின்னத்தில் நிற்க முடியுமா என்பதை யோசியுங்கள். வெற்றிதான் முக்கியம் என கூறியுள்ளார்கள். ஆனால் மதிமுகவில் உள்ள சில நிர்வாகிகள்  திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு விரும்பவில்லை.  இதனால் தனி சின்னம் தான் என்ற முடிவை எடுத்து வைகோவும் அறிவித்துவிட்டார்.

 

இந்த அறிவிப்பு ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் உள்ள திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியினரை  அதிர்ச்சியடைய செய்துள்ளது. தேர்தல் மிகக் குறுகிய நாட்களே உள்ளதால் மதிமுக வாங்கும் சுயேச்சை சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல முடியாது என்பதோடு பாராளுமன்ற தொகுதியில் மதிமுகவுக்கு பல பூத்களில் தொண்டர்களே இல்லை என்பதால் மதிமுகவுக்கு வழங்கப்படுகிற சின்னத்தை திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தான் மக்களிடம் கொண்டு சென்று அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் தி.மு.க.நிர்வாகிகள் தொண்டர்களிடையே சோர்வும் குமுறலும் ஏற்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.