Skip to main content

நடுரோட்டில் வைத்து வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிக் கொலை...

Published on 07/03/2020 | Edited on 07/03/2020

உத்தமபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞரை காரில் விரட்டி வந்த மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
         

uthamapalayam advocate case

 

 

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அருகே இருக்கும் குள்ளப்ப கவுண்டன்பட்டி சேர்ந்தவர் கருணாநிதி. அவருடைய மகன் ரஞ்சித் குமார், உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த ரஞ்சித் குமார் தனது குடும்பத்துடன் கம்பத்தில் வசித்து வந்துள்ளார். அவர் தினசரி நீதிமன்றத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று வருவது வழக்கம். அப்படி நேற்று மாலை நீதிமன்றப் பணிகளை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில்  கம்பம் சென்றபோது ஒரு மர்ம கார் அவரை பின் தொடர்ந்து விரட்டி வந்துள்ளது. அப்போது பூமாலை தியேட்டர்  அருகே  ரஞ்சித்குமார் சென்ற இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த மர்ம கார் மோதியது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார் ரஞ்சித்குமார். காரில் இருந்து இறங்கிய கும்பல் ஓட ஓட விரட்டி  ரஞ்சித்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ரஞ்சித் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதன்பின் அந்த கும்பல் காரில் ஏறி தப்பியது. அந்த வழியாக வந்தவர்கள் இதுகுறித்து உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான குழு விசாரணை நடத்தியதில், சிவப்பு நிற காரில் வந்த கும்பல் ரஞ்சித்குமாரை வெட்டி கொலைசெய்துவிட்டு  தப்பியது தெரியவந்தது. குற்றவாளியை பிடிக்க டிஎஸ்பி சின்னகண்ணு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரஞ்சித்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தயாரானது. அதை கண்ட  அவரது உறவினர்கள் உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை விலக்கிக்கொள்ளப்பட்டது. 

ஏற்கனவே வக்கீல் ரஞ்சித் குமார், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என உத்தமபாளையம் போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கிறார். அப்படி இருந்தும் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தான் இப்படி நடுரோட்டிலேயே வழக்கறிஞரை அந்த மர்ம கும்பல் ஓட ஓட வெட்டிக் கொலை செய்துள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து  இருந்துகொண்டே இருக்கும். அப்படி இருக்கும் போது  வக்கிலை சினிமாவில் வருவதைப்போல காரில் மோதி விட்டு கீழே இறங்கி சரமாரியாக வெட்டியது அந்த வழியே சென்றவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துள்ளனர். கொலைக்கு முன்விரோதமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் உத்தமபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.