Published on 04/10/2021 | Edited on 04/10/2021
சிதம்பரம் அருகே சேத்தியாதோப்பு கூட்டுரோடு அருகே மீன் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென சத்தத்துடன் மீன் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. சத்தத்துடன் லாரி எரிந்தது அந்தப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்த, இதுகுறித்து அப்பகுதியிலிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
இதுகுறித்த விசாரணையில், சீர்காழி அருகே எடமணல் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்பவர் வாகனத்தில் மீன் ஏற்றிக்கொண்டு கேரளா மாநிலம் வளஞ்சேரிக்கு சென்று மீனை இறக்கிவிட்டு சீர்காழி அருகேயுள்ள பூம்புகாருக்குத் திரும்பியபோது திடீரென டயர் வெடித்து மீன் லாரியில் தீ பற்றியதாக விசாரணையில் தெரியவந்தது. சாலையில் யாரும் அதிக நடமாட்டம் இல்லாததால் அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.