Skip to main content

திருச்சியில் பாகிஸ்தான் தீவிரவாதியின் கள்ள நோட்டு ஏஜெண்டுகள். ! பெண் உள்பட 4 பேரிடம் விசாரணை !

Published on 11/12/2017 | Edited on 11/12/2017
திருச்சியில் பாகிஸ்தான் தீவிரவாதியின்
 கள்ள நோட்டு ஏஜெண்டுகள் ! 
பெண் உள்பட 4 பேரிடம் விசாரணை ! 

இந்தியா நோட்டுகளில் கள்ள நோட்டுகள் கலந்து கிடக்கிறது என்றும் கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்று புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்தியது மோடி தலைமையிலான மத்திய அரசு. ஆனால், புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தி ஓர் ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் திருச்சி சந்தையில் புழக்கத்தில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் இருக்கிறார்கள் திருச்சி போலிஸ். 

திருச்சி மதுரை மெயின் ரோட்டில் உள்ள எடமலைப்பட்டிபுதூரில் சனிக்கிழமை தோறும்  மதுரை சந்தை நடைபெறுகிறது. இது அந்தப் பகுதியில் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனால் ஜன கூட்டம் அதிகமாகவும், விற்பனையும் அதிகமாக இருக்கும். 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிர்த்திகா பெண் ஒருவர் ரூ.  2000 நோட்டு கொடுத்து காய்கறி வாங்கினாராம். அது கள்ள நோட்டு என்ற சந்தேகம் வியாபாரிகளுக்கு ஏற்பட்டது. இதே போல தொடர்ந்து அடுத்த வாரங்கள் அதே பெண் 2000 ரூபாய் நோட்டை மாற்றிக்கொண்டே இருந்தார். 

இந்நிலையில் இந்த வாரமும் அதே பெண் சந்தைக்கு வந்து ரூ. 2000 நோட்டு கொடுத்து காய்கறி வாங்க முயன்ற போது அவரை வியாபாரிகள் பிடித்து எடமலைப்பட்டி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்குச் சென்ற போலீஸார் அந்த நோட்டை வாங்கிப் பார்த்தபோது அது கள்ள நோட்டு எனத் தெரியவந்தது. 

விசாரணையில் அந்தப் பெண் திருச்சி கொள்ளிடம் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த கிருத்திக்கா (38) என்பதும் அவர் ஏற்கனவே மணிகண்டம் பகுதியில் இருந்தாகவும், கணவன் இல்லை என்றும் ஒரு மகன் பொறியில் படிப்பதாகவும் சொன்னார். 

போலிசாரின் தொடர் சோதனையில் கிர்த்திகாவிடம் ஒரு கட்டு 2000 ரூபாய் கள்ள நோட்டு இருந்ததும் தெரியவந்தது. பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். இவர் எனக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதி விஜய் ஓட்டலில் தங்கியிருந்த  சென்னை சூளக்கரையைச் சேர்ந்த காதர்பாட்சா (40) எனக்குப் பழக்கம் ஆனார்.  அவரை விரும்புவதாகவும் அவர் மூலம் திருச்சியில் சார்லஸ் என்பவருக்கும், கதிர் என்பவருக்கும் 2000 ரூபாய் நோட்டு கட்டு கொடுத்தது தெரியவந்தது. காதர் பாட்சாவை விசாரித்தால் என்னுடைய முதலாளி ஜாஹீர் உசேன் என்பவர் கோவையிலிருந்து அச்சடித்துக் கொடுத்தார்கள் என்பதும் தெரியவந்தது. 

கள்ள நோட்டு ஜாஹீர் உசேன் பற்றி சி.பி.சி.ஐ.டி வட்டாரத்தில் விசாரித்த போது, 

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளை கடல் வழியாக இலங்கைக்கு அழைத்து வந்து அங்கிருந்து தமிழகத்துக்கு அனுப்பி வைப்பதற்காக இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்து முக்கியமான நகரங்களைச் சுற்றி வந்த ஜாஹீர் உசேனுக்கு முதல் கட்டமாக கள்ளநோட்டுகளை மாற்றிக்கொடுப்பதற்கான பயிற்சி கொடுப்பதற்காகக் கள்ள நோட்டுகளை மாற்றிய போது சென்னையில் 2010ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டியில் மாட்டி சிறைக்கு சென்றார். இந்த வழக்கில் 6-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாஹீர் உசேனுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதன் பிறகு மீண்டும் 2014 ல் மீண்டும் கள்ள நோட்டு, வெடிகுண்டு சதி திட்டம் வழக்கில் கைதாகி சென்றவன் தற்போது  சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தவுடன் அவர் திரும்பவும் கள்ளநோட்டு புழக்கத்தில் விட்டிருக்கிறார் என்கிறார்கள் ஏற்கனவே ஜாஹீர் உசேனை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள். 

இப்போது திருச்சி போலிசார்… கிர்த்திகா சார்லஸ், கதிர், காதர்பாட்சா ஆகியோரைப் கஸ்டடியில் வைத்துக்கொண்டு ஜஹீர்உசேனை தேடிக்கொண்டிருக்கிறார்கள். 

பாகிஸ்தான் கள்ளநோட்டுகள் திருச்சியைக் குறிவைத்து புழக்கத்தில் விட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உள்ளனர் காவல்துறையினர். 

- ஜெ.டி.ஆர். 

சார்ந்த செய்திகள்