Skip to main content

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவில் மீண்டும் சர்ச்சை

Published on 07/04/2023 | Edited on 08/04/2023

 

TNPSC Controversy again in Group 4 exam result

 

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில், ஒரே மையத்திலிருந்து 600க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. 

 

இதுகுறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருந்தார். 

 

இந்நிலையில், தற்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகளில் மேலும் ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வில் ஸ்டெனோ டைப்பிஸ்ட் எனும் தட்டச்சு தேர்வில் ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த 450 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இது தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. 

 

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் தட்டச்சு பிரிவுக்கு 2,500 இடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 600 பேர் தென்காசி மாவட்டத்தில் இருந்து மட்டுமே தேர்வாகியுள்ளனர். இதில், 450 பேர் சங்கரன்கோவில் பகுதியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதினர். அந்த 450 பேரும் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது தற்போது மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 

 

எழுந்த சர்ச்சை; விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி.

 

 

சார்ந்த செய்திகள்