Skip to main content

சேலம் மாவட்டத்தில் 79.23 சதவீதம் வாக்குப்பதிவு!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

 

tn assembly election salem district polls turnout details for constituencies


தமிழக சட்டமன்றத் தேர்தலில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் சராசரியாக 79.23 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

 

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஏப். 6) வாக்குப்பதிவு நடந்தது. காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் வாக்குப்பதிவு நடந்து. வழக்கமாக மாலை 05.00 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடத்தப்படும். கரோனா பரவல் காரணமாக இந்தமுறை முதன்முதலாக கூடுதலாக 2 மணி நேரம் நீட்டித்து, இரவு 07.00 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

 

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மாலை 06.00 மணி முதல் இரவு 07.00 மணி வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், 99 சதவீத தொகுதிகளில் கரோனா நோயாளிகளின் வருகை அவ்வளவாக இல்லாததால், சாதாரண வாக்காளர்கள் வந்தாலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

tn assembly election salem district polls turnout details for constituencies

 

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, மொத்தம் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.

 

மாற்றுத்திறனாளிகள், முதியோர்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அழைத்து வர வசதியாக சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டு இருந்தது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வாக்காளர்களுக்கு ஒரு கைக்கு மட்டும் கையுறையும், முகக்கவசமும் வழங்கப்பட்டது. வாக்களிக்கச் செல்லும் முன்பு ஒவ்வொரு வாக்காளரும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட்டது.

 

கரோனா தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. கரோனா நோயாளிகள் வாக்களிக்க வரும்போது, அவர்கள் அணிந்து கொள்ள பிபிஇ கிட் உடையும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் உள்ளூர் காவல்துறையினருடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

tn assembly election salem district polls turnout details for constituencies

 

தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரம்:

கெங்கவல்லி (தனி) சட்டமன்றத் தொகுதி:

கெங்கவல்லி (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 351 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 238960 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 183907 பேர் வாக்களித்தனர். இத்தொகுதியில் மொத்தம் 76.96 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

 

ஆத்தூர் (தனி) சட்டமன்றத் தொகுதி:

ஆத்தூர் தனி தொகுதியில் 254635 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 196413 பேர் வாக்களித்து இருந்தனர். 77.14 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. மொத்தம் 346 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 

 

ஏற்காடு (தனி) சட்டமன்றத் தொகுதி:

பழங்குடியினருக்கான ஏற்காடு தனி சட்டமன்றத் தொகுதியில் 408 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மொத்தம் 283916 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 236036 பேர் வாக்களித்துள்ளனர். 83.14 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

 

ஓமலூர் சட்டமன்றத் தொகுதி: 

ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் 295894 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் மூன்றாம் பாலினத்தவர் 94 பேர் உள்பட மொத்தம் 246598 பேர் வாக்களித்துள்ளனர். 83.34 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

 

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி:

மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் 286620 வாக்காளர்கள் உள்ளனர். இதரர் 52 பேர் உள்பட மொத்தம் 217831 பேர் வாக்களித்துள்ளனர். 76 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

 

எடப்பாடி சட்டமன்றத் தொகுதி:

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 285205 வாக்காளர்கள் உள்ளனர். 244125 பேர் வாக்களித்துள்ளனர். 85.60 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

tn assembly election salem district polls turnout details for constituencies

 

சங்ககிரி சட்டமன்றத் தொகுதி:

சங்ககிரி  சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 274234 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 229550 பேர் வாக்களித்துள்ளனர். இத்தொகுதியில் 83.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

 

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி:

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 299605 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 215429 பேர் வாக்களித்தனர். அதாவது, இத்தொகுதியில் மொத்தம் 71.90 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

 

சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி:

சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 72.06 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 276022 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 198896 பேர் வாக்களித்துள்ளனர்.

 

சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி:

சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 260372 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் மொத்தம் 76 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. மொத்தம் 197890 பேர் வாக்களித்துள்ளனர்.

 

வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி: 

வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 260006 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 222394 வாக்காளர்கள் உள்ளனர். 85.53 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

 

சேலம் மாவட்டம் முழுவதும் பெண் வாக்காளர்கள் 15 லட்சத்து 15019 பேரும், ஆண் வாக்காளர்கள் 15 லட்சத்து 246 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 204 மற்றும் மாற்றுத்திறனாளிகள் 204 பேரும் என மொத்தம் 30 லட்சத்து 15 ஆயிரத்து 469 பேர் உள்ளனர்.

tn assembly election salem district polls turnout details for constituencies

 

இவர்களில் 12 லட்சத்து 10369 ஆண்களும், 1178496 பெண்களும், 44 மூன்றாம் பாலினத்தவர்கள், 160 மாற்றுத்திறனாளிகளையும் சேர்த்து மொத்தம் 23 லட்சத்து 89069 பேர் வாக்களித்துள்ளனர். அதாவது, மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் சராசரியாக 79.23 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. மொத்தம் 4280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

 

கூட்ட நெரிசலை தவிர்க்க இம்முறை 1100 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு, புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு இருந்தன. மாவட்டத்தில் மிக அதிகபட்சமாக எடப்பாடி தொகுதியில் 85.60 சதவீதமும் குறைந்தபட்சமாக சேலம் மேற்கு தொகுதியில் 71.90 சதவீதமும் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

 

வாக்குப்பதிவு முடிந்ததும் கன்ட்ரோல் யூனிட், விவிபேட் இயந்திரம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஆகியவை பத்திரமாக மூடி சீல் வைக்கப்பட்டது. அவை அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

 

இதையடுத்து வரும் மே 2- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.