Skip to main content

அண்ணிக்கு பாலியல் தொந்தரவு - கொலை செய்த தாத்தா!

Published on 27/07/2018 | Edited on 27/07/2018

 

திருச்சி மதுரை மெயின் ரோட்டில் உள்ள எடமலைப்பட்டிபுதூர் - பஞ்சப்பூர் நெடுஞ்சாலை பிரிவு ரோடு மாநகராட்சி பூங்கா எதிரே உள்ள முட்புதரில் கடந்த 24ம் தேதி அடையாளம் தெரியாத ஒருவர் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டு கிடந்தார்.
 

அந்த வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் மாயமானவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டது. இளம் வயது இருப்பதாலும், கழுத்தில் பாசி கயிறு கட்டியும் உடம்பில் 4 இடங்களில் ஆழமாக வெட்டப்பட்டுயிருப்பதும் இரத்தம் எல்லாம் வெளியேறியிருப்பதும் வேறு எங்கையே கொலை செய்து இங்கே கொண்டு போட்டிருக்கிறார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 
 

 

 

காணாமல் போனாவர்கள் பட்டியில் இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த இருதயராஜ் மகன் சூர்யா (எ) சூர்யபிரகாஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர்கள் திருச்சி வந்து உடலை பார்த்து அது மகன் சூர்யாவின் உடல் தான் என உறுதிப்படுத்தினர். இதையடுத்து சூர்யாவின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 
 

உடலை வாங்கி பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருச்சியிலேயே தகனம் செய்தனர். இதன் பிறகு போலிஸ் நடந்திய விசாரணையில் சூர்யாவை 23ம் தேதி தாத்தா உறவு முறையான ஆறுமுகம் என்பவர் அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகத்தை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். 
 

விசாரணையில் முன்னுக்குபின் முரணாக அளித்த பதிலை அடுத்து ஆறுமுகத்திடம் விசாரணையை கடுமைப்படுத்தினார்கள். இது சம்மந்தமாக போலிஸ் தரப்பில் விசாரித்தில் ஆறுமுகத்தின் தம்பி மகன் ஆனந்த் என்பவர் திருமணம் செய்துள்ள பெண் பற்றி சூர்யா, நண்பர்களிடம் தவறாக சொல்லி கிண்டல் பண்ணியிருக்கிறார். அந்த பெண்ணை முதலில் காதலித்ததாகவும், பெண்ணின் செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி. இதனை கணவரிடம் கூறிய நிலையில், அவர் சூர்யாவை கண்டித்துள்ளார். இதில் தாத்தா ஆறுமுகமும் சூர்யாவை கண்டித்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து சூர்யா, அண்ணியிடம் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து பேசியுள்ளார்.
 

இதனால் ஆத்திரடைந்த ஆறுமுகம் மற்றும் மகன்களுடன் சேர்ந்து சூர்யாவை கொலை பண்ண முடிவு செய்து கடந்த 23ம் தேதி சூர்யாவை அழைத்து கொண்டு காரில் வந்த 8 பேர் கும்பல், மதுரை கொட்டாம்பட்டி அருகே இருட்டு பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டி கொன்றனர். அங்கு ரத்தம் முழுவதும் வெளியேறிய பின்னர், சூர்யாவின் உடலை காரில் எடுத்துக்கொண்டு வந்து திருச்சி வந்து எடமலைப்பட்டி புதூர் அருகே முட்புதரில் வீசி சென்றதாக தெரிய வந்தது.

 

 

 

 

இதையடுத்து கார் டிரைவர் பிரகாஷ் என்பவரை கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஆறுமுகம் மகன் மணிகண்டன், தம்பி மகன் ஆனந்த், முத்து உள்பட 6 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில் 4 பேர் கடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள். 
 

இது தொடர்பாக தாத்தா உள்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் 6 பேரை தேடுகின்றனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகள்களை மிரட்டி பாலியல் தொந்தரவு; தந்தையின் கொடூர செயல்

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

sexual harassment of daughters by Father's in covai

 

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது தொழிலாளிக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர், தொழிலாளி இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7 மற்றும் 5 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், சிறுமிகள் படிக்கும் பள்ளியில் நேற்று முன் தினம் (12-10-23) கோவை மாவட்டக் குழந்தைகள் நல அமைப்பு சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகள், பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்தும், தீயவர்களிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வது எப்படி? என்பது குறித்தும் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள், மாணவிகளிடம் யாராவது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தால் தைரியமாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர். 

 

அப்போது, தொழிலாளியின் இரண்டு மகள்களும் அழுதுகொண்டே அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அந்த புகாரில், தங்களது தந்தை கடந்த ஓர் ஆண்டாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக கூறினர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் சிறுமிகளை அழைத்துக் கொண்டு அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கு இந்த சம்பவம் குறித்து சிறுமிகளின் தாயிடம் எடுத்துக் கூறினர். இந்த தகவலை கேட்ட தாயும் அதிர்ச்சியடைந்தார். 

 

இதையடுத்து, சிறுமிகளின் தாய் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமிகளின் தந்தையை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், தனது இரண்டு மகள்களையும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், இதனை வெளியே கூறினால் சிறுமிகளை கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்ததுள்ளார் என்றும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவரை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

 

 

 

Next Story

அமைச்சர் மீது பாலியல் புகார்; பெண் பயிற்சியாளர் இடைநீக்கம்

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

Sexual complaint against minister Suspension of female coach

 

ஹரியானா முன்னாள் அமைச்சர் மற்றும் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங்குக்கு எதிராகப் பாலியல் புகார் அளித்த இளநிலை பெண் தடகள பயிற்சியாளரை விளையாட்டுத்துறை அமைச்சகம் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

 

ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, முன்னாள் ஹாக்கி வீரர் சந்தீப் சிங் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்து வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு, இவர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்வதாக இளநிலை பெண் பயிற்சியாளர் ஒருவர் புகார் செய்தார். அந்த புகாரில், சந்தீப் சிங் தன்னை ஜிம்மில் பார்த்ததாகவும், அதன் பின்னர் தன்னை பின் தொடர்ந்ததாகக் கூறினார். மேலும், இன்ஸ்டாகிராம் மூலம் தன்னை சந்திக்கும்படி தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகார் அளித்தார்.

 

இதையடுத்து, சில நாள்களுக்கு முன்பு ஹாக்கி அணியின் முன்னாள் இந்திய கேப்டன் சந்தீப் சிங் மீது சண்டிகர் காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியை மட்டும் ராஜினாமா செய்த சந்தீப், தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அதனால், தார்மீக அடிப்படையில் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்”  எனக் கூறியிருந்தார்.

 

இந்த நிலையில், சந்தீப் சிங் மீது புகார் கூறிய இளநிலை தடகள பெண் பயிற்சியாளரை பணி இடைநீக்கம் செய்து ஹரியானா மாநில விளையாட்டுத்துறை அமைச்சகம் கடந்த 11 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவில் இடைநீக்கம் செய்யப்படுவதற்கான காரணம் கூறப்படவில்லை. அந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

 

இது குறித்துப் பேசிய பெண் பயிற்சியாளர், “சில மாதங்களாக அரசின் உயர் அதிகாரிகள் எனக்கு கடும் அழுத்தம் கொடுத்து வந்தனர். எத்தனை இடையூறுகள் வந்தாலும் விளையாட்டுத் துறை அமைச்சர் மீதான வழக்கை தொடர்ந்து நடத்துவேன். என்னை பணியில் இருந்து நீக்கினாலும் என்னுடைய உரிமைக்காக போராடுவேன். என் பணி இடைநீக்கம் நடவடிக்கையை எதிர்த்தும் நீதிமன்றத்தில் முறையிடுவேன்” என்று கூறினார்.