Skip to main content

தூத்துக்குடி: வெடிகுண்டு வீச்சில் போலீஸ்காரர் பலி... வெடிகுண்டு வீசிய ரவுடியும் உயிரிழப்பு!

Published on 18/08/2020 | Edited on 18/08/2020

 

தூத்துக்குடி மாவட்டம்  வல்லநாடு மனக்கரை பகுதியில் கொலைக் குற்ற வழக்கில் தொடர்புடைய துரைமுத்துவைப் பிடிக்க போலீசார் சென்றுள்ளனர். தேடுதல் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் மீது வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. 

 

வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் போலீஸ்காரர் சுப்பிரமணியம் என்பவர் உயிரிழந்தார். மேலும் ஒரு போலீஸ்காரர் இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்தார். சுப்பிரமணியம் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

 

தொடர்ந்து போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் விரைந்தார். உடனடியாக குற்றவாளியைப் பிடிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் குற்றவாளியைப் பிடிக்கும் முயற்சியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். காவலர்களின் தீவிர தேடுதல் வேட்டையால் துரைமுத்து பிடிபட்டார். அப்போது துரைமுத்துக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவரும் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்