திருமாவளவனுக்கு 'கவிஞர் சுரதா விருது'
உவமை கவிஞர் சுரதா அவர்களின் குடும்பத்தினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு 'கவிஞர் திலகம் உவமைக் கவிஞர் சுரதா விருதினை' வழங்கினர். கவிஞர் சுரதா அவர்களின் குடும்பத்தினரின் ஒருங்கிணைப்பில் நல்லி குப்புசாமி விருது மற்றும் ரூபாய் ஐம்பதாயிரம் பொற்கிழியையும் வழங்க தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.