Skip to main content

மாநிலத்தின் வளர்ச்சிக்காக கொண்டுவரும் 8 வழி சாலை திட்டத்தை வரவேற்க வேண்டியதுதானே? உயர்நீதிமன்றம் அறிவுரை

Published on 06/07/2018 | Edited on 06/07/2018

 

 


மாநிலத்தின் வளர்ச்சிக்காக கொண்டுவரும் 8 வழி சாலை திட்டத்தை வரவேற்க வேண்டியதுதானே என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமல் செயல்படுத்தபடவுள்ள சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு, தர்மபுரி மாவட்ட பகுதிகளில் கையகப்படுத்துவதுவதற்காக தர்மபுரி மாவட்ட வருவாய் அதிகாரி மே 29ஆம் தேதி பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த பி.வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர்  வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கு சொந்தமான 1.21 ஹெக்டேர் நிலமும் இந்த திட்டத்திற்கு கையகப்படுத்தப்படுவதாக வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்னிலையில் கடந்த ஜூலை 4ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இதே போன்ற இரு பொது நல வழக்குகள் தொடரப்பட்டு நோட்டீஸ் பிறப்பிக்கப் பட்டுள்ளாதாக அரசு பிளீடர்ட்டி. என்.ராஜகோபாலன் தெரிவித்தார். அந்த வழக்குகளுடன் இணைத்து விசாரிக்கலாமா என மனுதாரரை விளக்கமளிக்க உத்தரவிட்டார்.
 

There is a need to welcome the 8th road road development program in the state


இன்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக்திவேல், பிற வழக்குகளுடன் இணைத்து விசாரிக்க ஒப்புதல் தெரிவித்தார். அப்போது நீதிபதி கல்யாணசுந்தரம், மாநிலத்தின் வளர்ச்சிக்காக வரும் திட்டங்களை வரவேற்க வேண்டியதுதானே என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது மனுதாரர் தரப்பில் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை என்றும், ஆனால் பொதுமக்கள், சுற்றுச்சூழல், உயிரினங்களுக்கு பாதிப்பு இல்லாமல் மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்பதே தங்கள் கோரிக்கை என தெரிவித்தார். மேலும், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்வரை நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

ஆனால் அரசு தலைமை வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததால், இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து நீதிபதி கிருஷ்ணமூர்த்தியின் வழக்கை பிற வழக்குகளுடன் விசாரணைக்கு பட்டியலிட பரிந்துரை செய்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.