Skip to main content

‘ஓ.பி.எஸ். ஒழிக’ என முழக்கங்கள்.. அடித்துவிரட்டிய போலீஸாரால் பரபரப்பு..!

Published on 25/02/2021 | Edited on 26/02/2021

 

theni district ops participate in chidhambaram pillai statue opening ceremony

 

போடி, பழைய பஸ் நிலையம் அருகில் வ.உ.சி.யின் சிமெண்ட் சிலை இருந்தது. அதனை மாற்றி அமைக்கும் விதமாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக வெண்கலச் சிலை உருவாக்கப்பட்டது. அப்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக அனுமதி கிடைக்காததால், வைத்த சிலையை அகற்றுவது தடுத்து நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், தற்போது ஐக்கிய பிள்ளைமார் சங்கம் சார்பில் முழு உருவ வெண்கலச் சிலை புதிதாக உருவாக்கப்பட்டு, போடி பழைய பஸ் நிலையம் அருகில் கப்பல் வடிவத்தில் பீடம் எழுப்பி, வ.உ.சி. சிலையை நிறுவுவதற்கு முறையாக அரசிடம் அனுமதி பெறப்பட்டது. 



அச்சிலை திறப்புக்கு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று (24.02.2021) மாலை சரியாக 6.40 மணி அளவில் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் ஆகியோர் பஸ் நிலையத்திலிருந்து பி.எச்.சாலை வழியாக தாரை தப்பட்டையுடன் அழைத்து வரப்பட்டனர். அதன்பின் பீடம் முன்பாக சமூதாயக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் பீடத்திற்குள் நுழைந்து வ.உ.சி. சிலையைத் திறந்து வைத்து, மாலை அணிவித்து, பூக்கள் தூவி மேடைக்குச் சென்று அமர்ந்தார் ஓ.பி.எஸ்.

 

theni district ops participate in chidhambaram pillai statue opening ceremony

 

அப்போது, கூட்டத்தில் மதுரையைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகள் தலைமையில் வாலிபர்கள் மேடைமுன் திரண்டு முற்றுகையிட்டு, “ஓ.பி.எஸ். ஒழிக.. ஒழிக..” என கோஷம் எழுப்பினர். மேலும், “வேளாளரும் நாங்களே, வெள்ளாளரும் நாங்களே. இதை மற்ற சமுதாயத்தினருக்குத் தாரை வார்த்துக் கொடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வராக உள்ள உங்களுக்கும் (ஓ.பன்னீர்செல்வம்) என்ன உரிமை இருக்கிறது” எனக் கேட்டு கண்டனம் தெரிவித்து “ஓ.பி.எஸ். ஒழிக.. ஓ.பி.எஸ். ஒழிக..” என கண்டன கோஷம் தொடர்ந்து எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

விபரீதம் ஏற்படும் சூழல் உருவானதால், போலீசார் மளமளவென கூட்டத்தில் பிரச்சனை எழுப்பியவர்களை அடித்து விரட்டினர். அப்போது அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் இரண்டு பெண்களையும் சில வாலிபர்களையும் அடித்து இழுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலைக் கிராமங்களுக்கு குதிரை மூலம் வாக்கு பெட்டி அனுப்பி வைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் சாலை வசதி இல்லாத, போடி சட்டமன்ற தொகுதியிலிருந்து குதிரை மற்றும் கழுதை மூலம் வாக்கு பெட்டிகளை அனுப்பும் அவலம், கடந்த 40 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் 18 வது மக்களவை உறுப்பினர் தேர்தலிலாவது எங்களுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மலைக் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் தேனி மக்களவைத் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு 40 வகையான உபகரணங்கள் கொண்ட பெட்டிகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியகுளம் பகுதியில் அகமலை, ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன் சென்ட்ரல், கொழுக்குமலை, அண்ணாநகர் உள்ளிட்ட 10 மலைக் கிராமங்களுக்கும் வாக்குப்பட்டி அனுப்பும் பணி போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 40 உபகாரணங்கள் கொண்ட பொருள்கள் அனுப்பப்பட்டது.

குறிப்பாக தேனி பாராளுமன்ற தொகுதி, ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 315 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் இன்று வாக்குப்பட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்கு தேவையான 40 பொருட்கள் உள்ளடங்கிய உபகரணங்கள் உள்ளிட்டவைகளைத் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரவேல் தலைமையில் அனுப்பப்பட்டது. அதன்படி போடி தொகுதியில் உள்ள 10 மலைக் கிராமங்களுக்கு வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

மலைக் கிராமங்களான காரிப்பட்டி, கொட்டகுடி, குரங்கணி  அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும் சென்ட்ரல் மற்றும் அகமது பகுதிகளுக்கு குதிரை மற்றும் கழுதை மூலமாகவும் வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பட்டி மதியம் 2 மணி அளவில் வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் பி1 பி2 பி3 ஆகியோர்களுடன் வாக்குப்பட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரில் சோதனை! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Former Minister R.P. Udayakumar car test

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.