Skip to main content

அமைச்சர் ஜெயக்குமாருக்கு வாய்க்கொழுப்பு அதிகம்! விளாசிய தங்கத்தமிழ்ச்செல்வன்!!

Published on 14/12/2018 | Edited on 14/12/2018

டிடிவி ஆதரவாளரான கரூரைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார். அப்பொழுது ஸ்டாலினிடம் செந்தில்பாலாஜி கூடியவிரைவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பலரை தி.மு.க.வுக்கு அழைத்து வருகிறேன் என வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார். 

 

thangatamilselvan about  jayakumar

 

இது சம்மந்தமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும், டிடிவி ஆதரவாளருமான தங்கத்தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது... 

 

செந்தில்பாலாஜி இங்கிருந்து போனதுனால அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. அவர் தொகுதியில் உள்ள  ஆதரவாளர்களுடன் தான் தி.மு.க.வில் சேர்ந்திருக்கிறார். அதுலயும் பலரை காசு கொடுத்து கூட்டிட்டு போய் இருக்கிறாரே தவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து பெயர் சொல்லும் அளவிற்கு யாரும் போகவில்லை. அதுபோல் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொறுப்பாளர்களும் செந்தில் பாலாஜி பின்னாடி எல்லாம் போகமாட்டார்கள். தொடர்ந்து துணைப் பொதுச் செயலாளர் டிடிவி பக்கம்தான் இருப்பார்களே தவிர இனி யாரும் தி.மு.க.வுக்கு போகமாட்டார்கள் என்றவரிடம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது செந்தில்பாலாஜியை தொடர்ந்து கூடிய விரைவில் தினகரனும் தி.மு.க.வில் சேரப் போகிறார் என்று பேசியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, அம்மா மறைந்த பின்பு அ.தி.மு.க.வில் அமைச்சர்களுக்கு எல்லாம் துளிர்விட்டு போய்விட்டது. அங்கங்கே வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்கள். அதுபோலதான் இந்த ஜெயக்குமாரும் எங்க துணைப் பொதுச்செயலாளரை தி.மு.கவுக்கு போகப்போகிறார் என்று சொல்லியிருக்கிறார். 

 

 

இந்த ஜெயக்குமாருக்கு வாய்க்கொழுப்பு அதிகம் அம்மா இருந்தப்ப ஓரங்கட்டி வைத்திருந்த ஜெயக்குமார் இப்ப பதவிக்கு வந்தபின் ஓவராக பேசி வருகிறார். இந்த ஜெயக்குமார் தொகுதியான ராயப்பேட்டை தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டாலும் ஜெயக்குமார் டெபாசிட் வாங்கமாட்டார். அது அவருக்கே தெரியும் அப்படியிருந்தும் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். இனிமேலாவது எங்க துணைப் பொதுச் செயலாளர் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாங்களும் ஜெயக்குமாரின் பல ரகசிய தகவல்களை அதிரடியாக வெளியிடுவோம் என்று கூறினார்! 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.

Next Story

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” - டிடிவி தினகரன் மனைவி கலகல பேச்சு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார். 

His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.