அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது
வருமான வரித்துறை: திருநாவுக்கரசு
அரசியல் லாப நோக்கத்தில் வருமானவரித்துறை சோதனையை பா.ஜ.க அரசு பயன்படுத்துகின்றது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கோவை விமான நிலையத்தில் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ஆனால் சோதனைகளில் என்ன கைப்பற்றபட்டது என்பது தொடர்பாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
வருமான வரித்துறை சோதனை பாரபட்சமாக நடத்தப்படுவதகவும், வருமான வரித்துறையினர் அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது.
ஊழல் வாதிகள் ஒருபக்கம் மட்டும் இல்லை. அதிமுகவின் மற்றொரு பக்கமும் வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டும் எனவும் அரசியல் லாப நோக்கத்தில் வருமானவரித்துறை சோதனையை பா.ஜ.க பயன்படுத்துகின்றது் எனவும் குற்றம்சாட்டினார்.
பா.ஜ.க ஆளும் குஜராத், ம.பி, உ.பி மாநிலங்களில் ஏன் கவர்னர் ஆய்வுகள் செய்வதில்லை என கேள்வி எழுப்பிய அவர் காங்கிரஸ் ஆளும் புதுவையில் ஆளுநர் மூலம் இடையுறு செய்யப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
மாநிலத்திற்கு மாநிலம் கவர்னர்களின் செயல்பாடுகள் மாறுபடுகின்றது எனவும் தெரிவித்த அவர், தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்வரை மீறி தமிழக ஆளுநர் செயல்படுவது சரியல்ல எனவும் தெரிவித்தார். பா.ஜ.க ஆட்சிக்கு பின்னர் தமிழக மீனவர்களின் படகுகள் மீட்கப்படவிஎல்லை எனவும், இந்திய இராணுவமே மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றது எனவும் தெரிவித்தார்.
மீனவர்கள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், கப்பற்படை சார்பில் மீனவர்களிடம் மன்னிப்பு கேட்கப்பட்டதை தொடர்ந்து கடற்படைக்கு எதிரான போராட்டம் கைவிடப்பட்டது எனவும் தெரிவித்தார்.
- அருள்