Skip to main content

அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை

Published on 23/01/2018 | Edited on 23/01/2018
 
அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில்
 புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை

அடுத்த சங்கராச்சாரியாராக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன்சம்பத்தை நியமிக்க கோரி, அர்ஜீன்சம்பத் சங்கராச்சாரியாக இருப்பது போல வேடமணிந்து வந்து கோவையில் தமிழ்புலிகள் கட்சியினர் கடிதம் அனுப்பினர்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன்சம்பத் சங்கராச்சாரியாக இருப்பது போல வேடமணிந்தும், பெரியார், அம்பேத்கார் படங்களுடனும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள துணை அஞ்சலகம் முன்பாக தமிழ்புலிகள் கட்சியினர் திரண்டனர். இதையடுத்து காஞ்சி சங்கர மடத்தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அதில் காஞ்சி சங்கராச்சார் ஜெயந்திர சரஸ்வதி உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால், இந்து மக்களுக்காக பணியாற்றும் ஆன்மிக நம்பிக்கை கொண்ட அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க வேண்டுமென தமிழ்புலிகள் கட்சியினர் வலியுறுத்தினர்.

- அருள்

சார்ந்த செய்திகள்