Skip to main content

வீடு திரும்பிய பெண்ணை கோயிலுக்குள் வைத்து வன்கொடுமை செய்த கொடூரம்!

Published on 08/01/2021 | Edited on 08/01/2021

 

temple women incident police investigation

 

பெண் கூலித்தொழிலாளிக்குக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவரை கைது செய்தது காவல்துறை. இந்த சம்பவத்தால் நாகை மாவட்ட மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

 

நாகை மாவட்டம், வெளிப்பாளையம் அருகே உள்ள காமராஜர் காலனியைச் சேர்ந்த பெண் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கூலி வேலை செய்து வருகிறார். கணவரை இழந்த இவர், பாதுகாப்பிற்காக இரவு நேரத்தில் மட்டும் தன்னுடைய சகோதரி வீட்டிற்கு சென்று தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (07/01/2021) இரவு வழக்கம் போல் சகோதரி வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த கவிதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் பின்தொடர்ந்து, கவிதாவை அருகில் உள்ள கோயிலுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்கள், அவரின் சகோதரி வீட்டிற்கும் சென்று மிரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது 

 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வெளிபாளையம் காவல்துறையினர், உடனடியாக சம்மந்தப்பட்ட பகுதிக்குச் சென்று வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணை அடிப்படையில் இரண்டு பேரைக் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

பாதிக்கப்பட்ட கவிதா, நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

 

இந்த சம்பவம் நாகை மாவட்ட மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்