Skip to main content

எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்!

Published on 15/12/2017 | Edited on 15/12/2017
எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்!

மனிதர்களையே கடவுளாக்கி எல்லை காவல் தெய்வங்காக வழிபட்டு வரும் போது. உயிரை பறிக்கும் எமனுக்கும் ஒரு தனி ஆலயம் அமைத்து 1300 ஆண்டுகளாக வழிபட்டு வருகிறது ஒரு கிராமம். அந்த கிராமத்தில் ஆக்கல் அழித்தல் கடவுள்கள் உள்ளதாகவும் அந்த கிராம மக்கள் கூறுகிறார்கள்.


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் உள்ளது திருச்சிற்றம்பலம் கிராமம். பாடல்பெற்ற சிவன் கோயில் கொண்ட கிராமம். அந்த கிராமத்தில் தான் உயிரை பறிக்கும் எமனுக்கும் கோயில்கட்ட வழிபட்டு வந்த கிராம மக்கள் தற்போது ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கோயிலை புதிதாக கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஜனவரியில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடுகளை விழா குழு செய்து வருகிறது. எமதர்மராஜா கோயில் திருப்பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொரளாதார உதவிகளை செய்து வருகிறார் எமனின் பக்தர்கள்.



கோயில் பூசாரி ராசேந்திரன்.. திருச்சிற்றம்பலம் என்றாலே பெருமை கொண்ட சிவன் கோயில் கொண்ட ஊர் மட்டுமல்ல எமதர்மராஜவுக்கும் தனி ஆலயம் கொண்ட ஊர் என்பது சிறப்பு. ஆசியாவிலேயே எமதர்மராஜாவுக்கு என்று தனி ஆலயம் அமையப்பெற்றது இங்கு மட்டும் தான். திருச்சி, நன்னிலத்தில் கோயில்களில் ஒரு பரிவார தெய்வமாக எமன் சிலை இருக்கும். ஆனால் திருச்சிற்றம்பலத்தில் மட்டுமே கோயிலாக உள்ளது. 



1300 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இந்த ஆலயத்தை வழிபட்டு வருவதாக தகவல் உண்டு. கோயில் கோபுரத்தில் பழங்கால காசு இருந்து எடுக்கப்பட்டது. அதன் பிறகு கோயில் சிதிலமடைந்துவிட்ட நிலையில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து திருப்பணி செய்ய திட்டமிட்டு அவர்களால் முடிந்த உதவிகள் செய்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் பொருளாதார உதவி கிடைப்பதால் திருப்பணி முடிவுறும் நிலையில் உள்ளது.
எமதர்மராஜா அழித்துவிடுவார் என்ற தவறான எண்ணம் மட்டுமே உள்ளது. இந்த ஆலணத்திற்கு வந்து வழிபட்டவர்கள் அவர்களின் குறைகள் நீங்கிவிட்டதாக மறுபடியும் வந்து வழிபட்டு செல்கிறார்கள். அப்படித் தான் சேலத்தில் இருந்தும் வந்துள்ளார்கள். 

இந்த ஆலயத்தின் சிறப்பை பற்றி அறிந்தவர்கள் சனிக்கிழமைகளில் தவறாமல் வந்து சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்கிறார்கள் என்றார். 

கிராம மக்களோ.. எமனை கண்டு பயப்படும் நிலை எங்களுக்கு இல்லை. எங்கள் கிராமத்தின் காவல் தெய்வங்களில் எமதர்மராஜாவையும் வைத்து வழிபட்டு வருகிறோம். எமன் எல்லாருக்கும் எதிரி இல்லை என்றனர்.

-இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்