Skip to main content

ரயில் நிலையத்தில் வழிப்பறி: திருநங்கைகள் கைது!

Published on 15/06/2018 | Edited on 15/06/2018
train


சென்னையை அடுத்த வண்டலூர் ரயில் நிலையத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று திருநங்கைகள் உள்பட 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூா் ரயில் நிலையத்தில் சந்தோஷ் குமார் என்பவரை கத்தியால் வெட்டி, தங்க செயின், செல்போன், வாட்ச், பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

ரயில்வே போலீசார் தனிப்படை கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் 3 திருநங்கைகள் உட்பட 5 பேரை கைது செய்தனர். அவா்களில் ஒருவா் 16 வயது சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது. இவா்கள் திண்டிவனத்தை சோ்ந்த மதன் குருமூா்த்தி-27 என்பவா் தலைமையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இவா்களிடமிருந்து சந்தோஷ்குமாரிடம் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகை, செல்போன், வாட்ச் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவா்களை மேல்நடவடிக்கைக்காக ரயில்வே பாதுகாப்பு தனிப்படை மேல்நடவடிக்கைக்காக காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூா் ஓட்டேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனா்.

இவா்கள் கூடுவாஞ்சேரி, மறைமலைநகா் உட்பட பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளதால், காஞ்சி மாவட்ட போலீசும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.டி. திருநங்கைக்கு நேர்ந்த கொடூரம்; சென்னையில் பயங்கரம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
The brutality of a transgender who worked in IT; Terrible in Chennai

குழந்தையைக் கடத்த வந்த நபர் எனத் திருநங்கை ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி இருந்தது. இந்த சம்பவத்தில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் திருநங்கை ஒருவர், பம்மல் மூங்கில் ஏரிப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இரவு நேர உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளார். பின்னர் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு தனியாகச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்தப் பகுதியில் இருந்த நபர்கள் சிலர் திருநங்கையைப் பார்த்தவுடன் அவர் குழந்தைகளைக் கடத்த வந்தவர் எனப் பேசிக்கொண்டே அவரை நெருங்கினர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருநங்கையோ 'தான் இந்த பகுதியில் தான் வசித்து வருகிறேன்' எனத் தெரிவித்தார். இருப்பினும் விடாத அந்த நபர்கள், அவரைத் தாக்கியதோடு அரை நிர்வாணப்படுத்தி அந்த பகுதியில் உள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர்.

அந்த பகுதியில் இருந்த சில நபர்களும் திருநங்கையைக் கொடூரமாகத் தாக்கினர். இந்த தகவல் சங்கர் நகர் காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் மின் கம்பத்தில் கட்டப்பட்ட திருநங்கையை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். திருநங்கை ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி பரவிய நிலையில், வீடியோ பதிவு அடிப்படையில் முருகன், நந்தகுமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோகன், அசோக்குமார் என்பவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அண்மையில், சென்னையில் குழந்தை கடத்தும் கும்பல் ஒன்று குழந்தைகளைக் கடத்தி உடல் உறுப்புகளை அறுத்து எடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் பரவிய நிலையில், அந்த வீடியோவில் குழந்தைகளை கடத்தும் நபர் போலவே திருநங்கை இருந்ததால் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் மீது தாக்குதல் நடத்தும் வீடியோவில், ''நீ தான இது" என நபர்கள் சிலர் மொபைலில் உள்ள வீடியோவை காட்டி கேள்வி எழுப்பினர். ஆனால் திருநங்கை 'அது நான் இல்லை' என சொல்லியும் கேட்காமல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது போலீசார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story

திருநங்கையைக் கொன்ற இளைஞர் கைது! 

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

transgender passes away case karur police arrested  one

 

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் மேல காவக்காரத் தெருவைச் சேர்ந்த திருநங்கை மணிமேகலை (28). இவர் கடந்த 15ம் தேதி அன்று, கொள்ளிடம் ஆற்றுக்கரை ஓரத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்து திருநங்கை சுகன்யா என்பவர் கொள்ளிடம் போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

 

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமாா், லால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அஜய்தங்கம் உள்ளிட்ட போலீஸார் மணிமேகலை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

மேலும், கொலைக்கு பயன்படுத்திய கத்தி, கைரேகையை மோப்பநாய் உதவியுடன் விசாரணை செய்தனர். மேலும் டி.எஸ்.பி. அஜய்தங்கம் தலைமையில் ஆய்வாளர்கள் விதுன்குமார், சுமதி உள்ளிட்ட போலீசார் கொண்ட 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியைத் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கும்பகோணம் அருகே மறைந்திருந்த கரூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

 

ரமேஷிடம் போலீஸார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கரூர் மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்தவர் திருநங்கையான மணிமேகலை. திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(25). ரமேஷ், கரூர் மாவட்டத்தில் வீடு கட்டும் கொத்தனார் வேலை செய்து வருகிறார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருநங்கையான மணிமேகலையுடன் ரமேஷ்க்கு சமூகவலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி நேரில் சந்தித்துள்ளனர். நாளடைவில் மணிமேகலை, ரமேஷ் இருவரும் காதலித்து பலமுறை தனிமையில் இருந்து வந்துள்ளனர். 

 

இந்நிலையில் மணிமேகலை, ரமேஷிடம் சேர்ந்து வாழுவோம் என ஆசை வார்த்தைக் கூறி பல லட்சம் ரூபாயை பெற்றுள்ளார். ரமேஷும் சேர்ந்து வாழுவோம் எனும் எண்ணத்தில் கொடுத்து, பலமுறை அவருடன் தனிமையில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில், ரமேஷ் மணிமேகலையின் செல்போனை பார்த்துள்ளார். அப்போது அவர், பல ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருந்து வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. 

 

அதன் பிறகு, தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்து தன்னிடம் வாங்கிய பணத்தை கொடு என மணிமேகலையிடம் ரமேஷ் கேட்டுள்ளார். ஆனால், அவர் தர மறுத்துள்ளார். தொடர்ந்து ரமேஷ், மணிமேகலையை பலமுறை தொடர்பு கொண்டும் போனை எடுக்காமல் தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் வேறொரு நம்பரில் இருந்து ரமேஷ், மணிமேகலையைத் தொடர்பு கொண்டு எனக்கு பணம் வேண்டாம் நாம் ஒன்றாக வாழ்வோம் எனக் கூறியுள்ளார். அதற்கு மணிமேகலை சம்மதம் தெரிவித்து, ‘நான் தற்போது மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ளேன். அங்கே வாருங்கள்’ என அழைத்துள்ளார்.

 

இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு மணிமேகலை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை கொள்ளிடம் பாலத்தின் அருகே இருந்துள்ளார். அங்கு வந்த ரமேஷ், மணிமேகலையிடம் ஆசையாகப் பேசி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். 

 

அப்போது ரமேஷ் தான் கொடுத்த பணத்தை எப்போது தருவாய் எனக் கேட்டுள்ளார். அதற்கு என்னால் பணம் தர முடியாது என மணிமேகலை கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிமேகலையின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடினார் என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ரமேஷ், திருச்சி நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தி திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.