Skip to main content

சென்னையில் நடைபெறும் ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் (படங்கள்) 

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (17.02.2023) மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான மறு நியமன போட்டித் தேர்வு என்ற அரசாணை எண் 149ஐ நீக்கம் செய்யவேண்டும் என்றும், அரசுப் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மேலும் ஆசிரியர்களின் குழந்தைகளும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டது அங்கிருந்தவர்கள் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்