Skip to main content

'10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு' -சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published on 05/09/2020 | Edited on 05/09/2020

 

tamilnadu rains chennai meteorological centre

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் ராணிப்பேட்டை, நாகை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக உசிலம்பட்டி (மதுரை)- 13 செ.மீ., தேவாலா (நீலகிரி)- 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு அரபிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், செப்டம்பர் 7- ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்