Skip to main content

பாலபாரதி மீது வழக்கு தொடர்வேன் -அமைச்சர் சீனிவாசன் அறிக்கை!

Published on 27/12/2018 | Edited on 27/12/2018

பொதுமக்களிடம் கமிசன் கேட்பதாக பொய் குற்றச்சாட்டை கூறிவரும் பாலபாரதி மீது வழக்குத் தொடர்வேன் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

 

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் மூன்று ரயில்வே கேட் இருக்கிறது. அதை கடந்து தான் மக்கள் அப்பகுதிகளுக்கு பல வருடங்களாக போய் வருகிறார்கள். இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பதற்காக கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. ஆனால் பணித் தொடங்கிய சில வருடங்களிலேயே அந்த பணியை கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் இரண்டு கிலோ மீட்டர் சுற்றித்தான் டவுன்களுக்கும், குழந்தைகளை பள்ளிக்கு விடக்கூடிய அவலநிலைக்கு ஆளாகினர். இந்த விசயம் முன்னாள் எம்.எல்.ஏ. தோழர் பாலபாரதிக்கு தெரியவே அப்பகுதி மக்களை திரட்டி கடந்த 12ம் தேதி மாவட்;ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் குதித்தார்.

 

I will case on Balabharathi Minister Srinivasan reported!

 

அப்போது இந்த பணி காலதாமதமாக இருப்பதற்கு வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தான் காரணம். கமிசனுக்காக பணியை செய்யவிடாமல் கிடப்பில் போட்டுவிட்டார் அமைச்சர் சீனிவாசன் என குற்றச்சாட்டு சுமத்தினார். இந்த விசயம் மாவட்ட கலெக்டர் வினயின் காதிற்கு எட்டவே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தோழர் பாலபாரதியை உடனே கூப்பிட்டு பேச்சுவார்த்தை நடத்தி கூடிய விரைவில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடரும். நிலம் கொடுத்தவர்களுக்கும் உடனடியாக பணம் கொடுக்கவும், ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததின் பேரில் காத்திருப்பு போராட்டத்தை தோழர் பாலபாரதி கைவிட்டார்.

 

 

இந்த நிலையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விடுத்துள்ள தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது... 

 

I will case on Balabharathi Minister Srinivasan reported!

 

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் தற்போது ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி இந்த மேம்பால பணிகளுக்கு எடுக்கப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடு தொகையினை அதன் உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு நான் கமிசன் கேட்டு தாமதப்படுத்தி வருவதாக ஒரு பொய்யான குற்றச்சாட்டுகளை அரசியல் லாபத்திற்காக கூறி வருகிறார். இது முற்றிலும் வடிகட்டிய பொய், உண்மைக்கு புறம்பானது கடந்த 2016ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் போது மாவட்ட நிர்வாகம் அப்போதைய சந்தை மதிப்பான நகர்ப்புற பகுதிக்கு 225 சதவீதமும், கிராமப்புற பகுதிக்கு 275 சதவிகிதமும், நில உரிமையாளர்களுக்கு பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் சென்னை நில நிர்வாக ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது.

 

இது வெளிப்படையான ஒன்று. அதன்படி திண்டுக்கல் கோட்டாட்சியர் வங்கிக்கணக்கில் 31கோடியே 91லட்சம் ஒதுக்கீடு செய்து வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் 2017 தமிழக அரசு சந்தை வழிகாட்டி மதிப்பினை 33 சதவிகிதமாக குறைத்து அறிவித்தது. அதன் காரணமாக சென்னை நில நிர்வாக ஆணையர் பாலப்பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு கூடுதல் தொகையினை விடுவிக்க மறுத்துவிட்டார். இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதி நானும், மாவட்ட நிர்வாகமும் ஏற்கனவே நிர்ணயித்த தொகையினை நில உரிமையாளர்களுக்கு பெற்றுத் தர முயற்சித்து வருகிறோம். 

 

 

நானும் மாவட்ட அமைச்சர் என்ற முறையில் தமிழக முதலமைச்சரிடம் வழிவகுத்து வருகிறேன். இந்த நிலையில் நான் கமிசன் கேட்டு பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு தொகையினை தாமதப்படுத்தி வருவதாக முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறுவது அரசியல் லாபத்திற்காக கூறும் அபாண்டமான பொய். பொதுமக்களை திசை திருப்புவதற்காக கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளை என் மீது கூறி வருகிறார். இதற்கு பாலபாரதி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன் என்று தெரிவித்துள்ளார்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“போன முறை மாம்பழத்தோடு எங்க கூட இருந்தீங்க... இந்த முறை அவங்களோட இருக்குறீங்க” - சீனிவாசன் கிண்டல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dindigul Srinivasan taunts pmk candidate

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சச்சிதானந்தமும், அதிமுக கூட்டணியில்  உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவரும் வேட்பாளருமான முகமது  முபாரக்கும், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளர் திலகபாமா உள்பட சில சுயேட்சைகள் போட்டிப் போடுகிறார்கள்.

Dindigul Srinivasan taunts pmk candidate

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வந்தது. இதில் பா.ம.க. வேட்பாளர் திலகபாமா தனது வேட்புமனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பூங்கொடியிடம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அதேபோல் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளரான எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகமது முபாரக், முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருடன் தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பூங்கொடியிடம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

Dindigul Srinivasan taunts pmk candidate

அதேபோல் ஆளுங்கட்சியான திமுக கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சச்சிதானந்தத்துடன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான பாலகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் அதிகாரியான பூங்கொடியிடம் சி.பி.எம்.  சச்சிதானந்தம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இப்படி மூன்று கட்சிகளும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Dindigul Srinivasan taunts pmk candidate

இந்த நிலையில், வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை ஒரு பக்கம் சரிபார்ப்பு பணியும் நடந்து கொண்டிருந்தது. அப்போது, முதலில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ம.க. வேட்பாளர் திலகபாமா ஒரு அறையில் உட்கார்ந்துவிட்டு வெளியே வரும்போது, அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்த முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன், திலகபாமாவை பார்த்த உடன் நீங்களும் இங்கேயா இருக்கீங்க... நல்லா இருக்கீங்களா... என்று கேட்டவாறே, கடந்த முறை மாம்பழம் சின்னத்தில் எங்களோடு இருந்தீங்க. இந்த முறை அவங்களோட இருக்குறீங்க... என்று கிண்டலடித்தவாறே திலகபாமாவிடம் கேட்டார். அதைத் தொடர்ந்து உடன் வந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் சிலரும் திலகபாமா உட்பட உடன் வந்தவர்களுக்கும் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.