Skip to main content

சூரப்பா துணைவேந்தரானதுக்கு தமிழக அரசுதான் காரணம் -ஆளுநரை சந்தித்த பாரதிராஜா

Published on 09/04/2018 | Edited on 09/04/2018

தமிழ் கலை பண்பாட்டுத்துறை சார்பாக, கவர்னரை சந்தித்த இயக்குனர் பாரதிராஜா  செய்தியாளர்களை சந்தித்தார். இதுபற்றிய பதிவில், 

தமிழ் கலை, பண்பாட்டுத்துறை சார்பாக ஆளுநரை சந்தித்து பேசினோம். அப்போது அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் பற்றிய கேள்விக்கு ஆளுநர் பதில் கூறுகையில், "140க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தமிழக அரசால் பெறப்பட்டது அப்படியானால் கர்நாடகத்தை சேர்ந்தவரின் விண்ணப்பத்தை ஏன் பெற்றார்கள், தமிழக அரசு மூலம் பரிசீலிக்கப்பட்ட துணைவேந்தர் நியமன பட்டியலில் அவர் எப்படி இடம் பிடித்தார் என தெரியவில்லை" என எங்கள் முன் கேள்வியை வைத்துள்ளார் எனவே இதற்கு தமிழக அரசு விளக்கம் கொடுக்க வேண்டும். கொந்தளிப்பான இந்த நேரத்தில் இந்த செய்கை எப்படி நடந்தது.


 

bharathiraja

 

அதேபோல் இசைக்கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரிக்கு துணைவேந்தர் நியமனம் எப்படி நடந்தது எனவும் தமிழக அரசிடம் இருந்து விளக்கம் தேவை.  ஆளுநர் கூறுகையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் இறுதி நிலை பட்டியலில் இருந்த மூன்று பேரில் கல்வி அடிப்படையை வைத்து சூரப்பாவை நியமித்தோம் ஆனால் அவருடைய விண்ணப்பத்தை பெற்றது தமிழக அரசுதான் என தெளிவுபடுத்தியதாக கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.