Skip to main content

முல்லைப் பெரியாறு அணைக்கு ஆய்வுக்கு சென்ற தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு! கேரளா அரசின் அடாவடி!!

Published on 06/02/2019 | Edited on 06/02/2019

முல்லைப் பெரியாறு அணைக்கு ஆய்வு பயிற்சிக்காக சென்ற தமிழக பொதுப்பணித்துறை குழுவினருக்கு கேரள வனத் துறையினர் அனுமதி மறுத்தனர். 

 

திருச்சி மாவட்டத்திலுள்ள துவாக்குடியில் நீர் பாசன மேலாண்மை பயிற்சி நிறுவனம் உள்ளது.இந்த நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியாளர்களுக்கு பெரியாறு வைகை வடிநிலப் பகுதிகளில் தல ஆய்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்ட 27 பேர் கொண்ட குழுவினர் கேரளாவில் உள்ள இடுக்கி அணை முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணை முதல் ராமநாத வரையிலான கால்வாய் ஆறுகள் போன்ற பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து பயிற்சி பெற உள்ளனர். 

 

 Tamil Nadu officials who went to study in Mullaiperiyar dam denied permission! Kerala Government

 

இதற்காக இந்த குழுவினர் நேற்று கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள இடுக்கி அணைக்கு சென்று பார்வையிட்டனர். அதன் பின்னர் அங்கிருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு செல்வதற்காக தேக்கடி வந்தனர். அவர்களுடன் முல்லைப் பெரியாறு அணையின் உதவி கோட்ட பொறியாளர் சாம்இர்வின்  மற்றும் பொறியாளர்கள் சிலரும் வந்திருந்தனர். இப்படி வந்த  தமிழக அதிகாரிகளை தேக்கடி ஏரிக்கு செல்லும் சாலையில் உள்ள கேரள வனத்துறை சாவடியில் குழுவினரை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் முறையான அனுமதி பெறவில்லை என்று கூறி அவர்களை முல்லைப் பெரியாறு அணைக்கு செல்ல அனுமதி மறுத்தனர்.

 

 Tamil Nadu officials who went to study in Mullaiperiyar dam denied permission! Kerala Government

 

 அப்போது கேரள வனத்துறை இணை இயக்குனர் ஷில்பா அங்கு வந்தார். அவரும் அனுமதி வழங்க முடியாது என்று தெரிவித்தார். அப்படி இருந்தும் மதியம் 2 மணிக்கு வந்த தமிழக குழுவினர் மாலை 5 மணி வரை அங்கேயே அனுமதிக்காக காத்து இருந்தனர். ஆனால் இறுதிவரை கேரள வனத்துறையினர் அனுமதி கொடுக்காமல் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் அந்த குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பி திருச்சி இரவு  சென்றனர்.

 

 

இதுசம்மந்தமாக உதவி கோட்ட பொறியாளர் சாம் இர்வினிடம் கேட்டபோது..... முல்லை பெரியாறு மற்றும் வைகை வடிநிலை பகுதிகளில் தல ஆய்வு பயிற்சிக்காக தமிழக பொதுப்பணித்துறை குழுவினர் அழைத்து வரப்பட்டனர். காலையில் இடுக்கி அணையை  பார்த்துவிட்டு முல்லை பெரியாறு அணையை பார்வையிட வந்தபோது கேரள வனத் துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட அனுமதிக்காக கேரள வனத்துறைக்கு எழுத்துபூர்வமாக தகவல் தெரிவித்திருந்தோம். ஆனால் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் அணைக்கு செல்ல முடியவில்லை இதையடுத்து மலையில் தேக்கடியில் உள்ள மின் உற்பத்தி நிலையத்திற்கு குழாய் மூலம் தண்ணீர் திறக்கப்படும் இடத்தில் உள்ள வைகை அணை மின் உற்பத்தி நிலையம் கால்வாய் போன்ற பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் தொடர்ந்து வைகைஅண உள்ளிட்ட பிற பகுதிகளை பார்வையிட இருக்கிறார்கள் என்று கூறினார்.

 

 

 

ஆனால் தமிழகத்திற்கு சொந்தமான முல்லை பெரியார் அணையை தமிழக அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கே கேரள வனத் துறையினர் அனுமதிக்காமல் அடாவடி செய்து தமிழக அதிகாரிகளை திருப்பி அனுப்பியது தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரளா எல்லையில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பொதுமக்கள்  மத்தியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊருக்குள் நுழைந்த காட்டு யானை; அச்சத்தில் கிராம மக்கள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
A wild elephant entered the town; Villagers in fear

கோவையில் வேடப்பட்டியில் திடீரென காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பேரூர் அடுத்துள்ள வேடப்பட்டி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றை காட்டு யானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் முகாமிட்டு பெரும் அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கரடிமடை பகுதிக்கு வந்த காட்டு யானை தாக்கியதில் நான்கு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பேரூர் வேடப்பட்டி சாலை வழியாக ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. சுமார் 20 கிலோமீட்டர் வனப்பகுதியில் இருந்து கடந்து வந்துள்ள காட்டு யானை தனியார் கல்லூரியின் பின்புறத்தில் முகாமிட்டுள்ளது.

காட்டு யானையை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த கோவை வனச்சரக வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானை சுற்றி வருவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒற்றைக் காட்டுயானை ஊருக்குள் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

குட்டியுடன் நின்ற காட்டு யானை; வனத்துறை எச்சரிக்கை

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
A wild elephant standing with her cub in Kadapur; Motorists fear

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடும் வெயிலின் தாக்கம் காரணமாக வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் யானை கூட்டங்கள் இரவு நேரங்களில் உணவு, தண்ணீர் தேடி சாலையோரம் வருவதும் கிராமத்துக்குள் புகுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் மிக குறுகிய சாலையான மலைப்பாதையில் நேற்று இரவு 7 மணி அளவில் குட்டியுடன் தாய் யானை நின்று உணவு தேடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த வாகன ஓட்டிகள் சிறிது தூரத்திலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு, தங்களது செல்போனில் யானையைப் படம் பிடிக்க ஆரம்பித்தனர். யானை சிறிது நேரம் அங்கேயே நின்று விட்டதால் வாகன ஓட்டிகளால் சாலையைக் கடக்க முடியவில்லை. பிறகு சிறிது நேரம் கழித்து யானை மலைப்பாதை நோக்கி மேலே ஏறியதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை மெதுவாக இயக்கினர்.

காட்டு யானை குட்டியுடன் சாலையில் நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, குட்டியுடன் இருக்கும் தாய் யானைக்கு அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம். அது மிகவும் ஆபத்தானது. குட்டியுடன் யானைகளைக் கண்டால் வெகு தூரத்திலேயே வண்டியை நிறுத்தி விடுங்கள் என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.