Skip to main content

எஸ்.வி.சேகர் செய்திருப்பது அநாகரிகத்தின் உச்சம்: நெறியாளர் சுகிதா கண்டனம்

Published on 20/04/2018 | Edited on 21/04/2018
svsekar 55555555.jpg


திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர்கள் பற்றியும், பெண் பத்திரிகையாளர்களையும் மிகவும் அவதூறாக விமர்சித்து பதிவிட்டது தமிழ்நாடு முழுக்க பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நெறியாளரான சுகிதா நக்கீரன் இணையதளத்திடம் பேசும்போது, 
 

பொதுவாக எல்லாத்துறைகளிலும் பெண்களுக்கு இதுபோன்ற தொந்தரவுகள், எதிர்ப்புகள் இருக்கிறது. அரசியலிலும் இருக்கிறது. பெண்களை பிடிக்காவிட்டால் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்புகிறார்கள். சிலர் பட்டும், படாமல் செய்வார்கள். எனக்குக்கூட கடந்த காலங்களில் இதுபோன்ற தொந்தரவுகள் இருந்தது. பின்னர் குரல் கொடுத்தார்கள். பொதுவெளியில் உள்ள பெண்களை சமூக வலைதளங்களில் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதுகிறார்கள். ஆனால் எஸ்.வி.சேகர் செய்திருப்பது அதன் உச்சம். அநாகரிகத்தின் உச்சம்.

கேள்வி கேட்ட பெண் நிருபரை ஆளுநர் கன்னத்தில் தட்டுகிறார். கேட்டால் பேத்தி என்கிறார். இதேபோல் ஒரு ஆண் நிருபர் அறிவுப்பூர்வமாக கேள்வி கேட்டால் அவரது கன்னத்தில் தட்டுவார்களா. ஆளுநர் சொன்ன பதில் ஏற்புடையது அல்ல. ஆனால் அவர் மன்னிப்பு கேட்டு பிரச்சனை முடிவுக்கு வரும் நேரத்தில், எஸ்.வி. சேகர் ஏன் இந்த பதிவினை ஷேர் செய்ய வேண்டும். 
 

கடும் எதிர்ப்பு வந்த பின்னர் மன்னிப்பு கேட்டு விளக்கம் கொடுக்கிறார். இவர் மேல் எந்த அளவுக்கு எதிர்ப்பு இருக்கிறதோ, அதைவிட அதிகமாக அந்த பதிவை வெளியிட்ட திருமலை சா என்பருக்கு எதிர்ப்பு அதிகம். எல்லோருமே இதில் பெண் நிருபரை மட்டுமே இழிவாக பேசியதாக குறிப்பிடுகிறார்கள். இதில் இன்னொரு விசயம் அடங்கியிருக்கிறது. பத்திரிக்கை துறையில் இருக்கும் ஆண்களையும் கேவளப்படுத்திருக்கிறார்கள். ஆண் பத்திரிக்கையாளர்களை உயர்த்தி பேசவில்லை. 
 

தமிழ் பத்திரிக்கைத்துறைக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. 30 வருடங்களை கடந்த நக்கீரனுக்கு சமூதாயத்தில் ஒரு மரியாதை இருக்கிறது. 40 வருடம், 50 வருடம் என்று ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு மரியாதை உள்ளது. இவருடைய வயதை கடந்த மீடியாக்கள் இங்கு உள்ளது. ஆனால் ஒட்டுமொத்த மீடியாக்களையும் இழிவுப்படுத்துகிறார். இவர் மீடியா வெளிச்சத்தில்தான் நடிகராக முன்னேறியுள்ளார். படிப்பறிவில்லாதவர்களே மீடியாக்களில் உள்ளனர் என்கிறார். இவர் என்ன படித்து முடித்து சினிமாவிற்கு வந்தார். இவ்வாறு கூறினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“அண்ணாமலை இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க ஜெயிக்காது” - எஸ்.வி. சேகர்

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

 SV Shekhar says BJP will not win in Tamil Nadu until Annamalai is there

 

அண்ணாமலை பா.ஜ.க தலைவராக இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று முன்னாள் எம்.எல்.ஏ.வும், திரைப்பட நடிகருமான எஸ்.வி. சேகர் கூறியுள்ளார்.

 

ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.வி. சேகர் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது இனிமேல் தான் தெரிய வரும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் கொண்டு வந்தாலும் 2026 ஆம் ஆண்டு கூட இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை.

 

அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிராக அனைத்து விஷயங்களையும் செய்கிறார். அண்ணாமலை இருக்கும் வரை அதிமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெற வாய்ப்பு இல்லை. அதேபோல், தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைவராக அண்ணாமலை தொடர்ந்து இருந்தால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க வெற்றி பெற வாய்ப்பு இல்லை. காசு கொடுத்து, பிரியாணி கொடுத்து தினமும் 300 பேர் பஸ் ஸ்டாண்ட் வரை நடப்பதால் என்ன மாற்றம் ஏற்படப் போகிறது?

 

அண்ணாமலை தலைமையில், நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது. அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க.வில் நான் இருக்க மாட்டேன். அதைப் பற்றி மோடி என்னிடம் கேட்கட்டும். அதற்கு நான் பதில் கூறுகிறேன். அண்ணாமலை போன்றவர்கள் தலைமையில் தனித்து இயங்குவது படு வேஸ்ட். அண்ணாமலை நின்ற தொகுதியிலேயே அவரால் வெற்றி பெற முடியவில்லை. அவரும், சீமானும் ஒரே தொகுதியில் நின்றாலும் அவரை விட சீமான் தான் அதிகமான வாக்குகள் பெறுவார். இந்தியாவில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு தான். தி.மு.க அரசு கொண்டு வந்த காலை உணவுத் திட்டம் மிகவும் வரவேற்கத்தக்க விஷயமாகும்” என்று கூறினார்.  

 

 

Next Story

'ஆச்சி மசாலுக்கு எதிராக டுவிட்... சிறுபான்மை பேச்சு' மீண்டும் சர்ச்சையில் எஸ்.வி சேகர்..!

Published on 07/09/2019 | Edited on 07/09/2019

டிவிட்டரில் ஏதாவது சர்ச்சையான கருத்துக்களை சொல்லி சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர்களில் முதல் இரண்டு இடங்களில் இருப்பவர்கள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மற்றும் நடிகர் எஸ்.வி சேகர். இதில் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர் ராஜா. அடுத்த இடத்தில் இருப்பவர் "பத்திரிக்கையாளர் புகழ்" எஸ்.வி சேகர். இந்நிலையில், ஒரு புகைப்படத்தை பகிர்ந்து நீதி கேட்டுள்ளார்.
 


இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, "#TNGovt #DGP #foodsafety #TNcmo #HighCourt இதற்கு உடனடி தடை நடவடிக்கை உண்டா அல்லது சிறு பான்மை என்று சலுகை கொடுக்கப்படுமா⁉️.   டிவில காட்டினாங்களே அரைக்கிறது, இடிக்கிறது இதெல்லாம் பொய்யா கோபால்" என்று அந்த டுவிட்டில் தெரிவித்துள்ளார்.