Skip to main content

பேருந்து ஓட்டையில் பெண் விழுந்த சம்பவம்; சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
A sudden hole in the bus; Appeal to Madras High Court

சென்னையில் அரசுப் பேருந்தின் பின்புறத்தில் திடீரென ஏற்பட்ட துவாரத்தால் பெண் பயணி ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், நீதிமன்றத்தில் இது தொடர்பாக முறையிடப்பட்டுள்ளது.

நேற்று சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்தில் பெண் பயணி ஒருவர் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்பொழுது திடீரென இருக்கையின் கீழே இருந்த பலகை உடைந்து ஒரு பெரிய ஓட்டை உருவானது. அதன் வழியே பெண் பயணி கீழே விழுந்தார்.

முழுதாக கீழே விழாமல் பேருந்தில் பெண் சிக்கிக்கொண்டார். பெண் பயணி விழுந்தது தெரியாமல் பேருந்து சிறிது தூரம் சென்றது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அப்பெண்ணை உடனடியாக மீட்டு அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.

பேருந்தில் ஏற்பட்ட இந்த உடைப்புக்கு பணிமனை பணியாளர்களின் அலட்சியமே காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. பேருந்தின் பின்புற இருக்கையில் கீழே உள்ள பலகை சேதமடைந்து இருப்பதைக் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். இது குறித்து பேசின் பிரிட்ஜ் பணிமனை கிளை மேலாளர் மற்றும் தொழில்நுட்ப பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காயமடைந்த பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு தற்பொழுது வீடு திரும்பி இருப்பதாகவும் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A sudden hole in the bus; Appeal to Madras High Court

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. செய்தித் தாள்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் வழக்கறிஞர் ஆர்.ஒய். ஜார்ஜ் வில்லியம் என்பவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். பேருந்துகளில் பல கவனக் குறைபாடுகள் இருக்கிறது. பேருந்துகளின் தரம் குறித்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் பார்த்துக் கொள்வதாக (We Will See That) தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி பரத் சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வு பதிலளித்துள்ளது.

சார்ந்த செய்திகள்