Skip to main content

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் திடீர் சிக்கல்!

Published on 14/09/2018 | Edited on 14/09/2018


ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக ஆளுநர் நேற்று அனுப்பி வைத்தார். இதனால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும், மத்திய அரசு இவர்களை விடுதலை செய்வதில் தயக்கம் காட்டியது. இது சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி உச்சநீதிமன்றம், `ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்றும் தமிழக அரசின் பரிந்துரை அடிப்படையில் 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநரே முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை கூட்டப்பட்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்பட 7 பேரை `முன் விடுதலை செய்ய வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உடனடியாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட தமிழக ஆளுநர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்வதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிடுவார் என்று பரவலாக கருத்து நிலவியது.

இந்தநிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரை அறிக்கையை நேற்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஆளுநர் மாளிகையை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியானது. அமைச்சரவையின் பரிந்துரை தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் நீண்ட ஆலோசனை நடத்திய பின்னரே ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜினாமா!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
Punjab Governor banwarilal Purohit resigns

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் தனது ராஜினமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பினார். அந்த கடிதத்தில், எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வேறு சில கடமைகளின் காரணமாகவும், பஞ்சாப் ஆளுநர் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி ஆகிய பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். தயவு செய்து இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பன்வாரிலால் புரோகித் முன்னதாக அசாம், மேகாலயா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார். இவர் 14 வது தமிழ்நாடு ஆளுநராக கடந்த 2017  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி முதல்  2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி வரை வரை பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 

Next Story

குடியரசுத் தலைவர் ஆட்சி; பஞ்சாப் முதல்வருக்கு ஆளுநர் எச்சரிக்கை

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

President's Rule; Governor warns Punjab Chief Minister

 

தான் எழுதிய கடிதத்திற்கு உரிய பதிலளிக்காவிட்டால் பஞ்சாப் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரைக்க போவதாக அம்மாநில முதல்வருக்கு ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பகவந்த் மான் பதவி வகித்து வருகிறார். அம்மாநில ஆளுநராக பன்வாரிலால் புரோகித் செயல்பட்டு வருக்கிறார். இந்த சூழலில் ஆளுநர் மாளிகையில் இருந்து பஞ்சாப் அரசுக்கு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் மசோதா குறித்து விளக்கம் அளிப்பது குறித்து கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இதற்கு அரசு சார்பில் இருந்து உரிய விளக்கம் அளிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில் முதல்வர் பகவந்த் மான்க்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எழுதிய கடிதத்தில், “தான் எழுதிய கடிதங்களுக்கு பஞ்சாப் முதல்வர் பதில் அளிக்க வேண்டும். அப்படி பதிலளிக்காவிட்டால் அரசியலமைப்பு சட்ட நடைமுறை சீர்குலைந்துவிட்டதாக கூறி குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்வேன்” என தெரிவித்துள்ளார்.