Skip to main content

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு 

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

Students writing public exams must wear masks - Tamil Nadu government order

 

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

 

தமிழகத்தில் நாளை மறுநாள் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அடுத்தடுத்து பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு எழுதும்போது கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தனிமனித இடைவெளியைப் பின்பற்றி தேர்வு நடந்தாலும்கூட மாஸ்க் அணிவது கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது.

 

அதேபோல, தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் பறக்கும்படை அதிகாரிகளும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.   

 

 

சார்ந்த செய்திகள்