பிச்சாவரத்தில் மின்னல்தாக்கி மாணவர் பலி
சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பெருகவாழ்ந்தான் கிராமத்தை சேர்ந்த ரமேஷ்பாபு என்பவர் மகன் சஞ்சீவிபத்மநாபன்(14) மாணவன் மற்றும் அதே பகுதியை சார்ந்தவர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் படகு சவாரி செய்ய ஞாயிற்றுகிழமை மாலை 4 மணிக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வனத்துறையினருக்கு சொந்தமான படகில் சவாரி செய்துவிட்டு மாலை 5.30 மணியளவில் கரைக்கு வந்துள்ளனர்.
அப்போது பிச்சாவரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதியில் பலத்த மழை இடி மின்னலுடன் பெய்தது. அதிக சத்ததுடன் மின்னல் அடித்தது. மின்னல் மாணவன் சஞ்சீவிபத்மநாபன், மற்றும் அவருடன் வந்து மூன்று பேர் மீதும் விழுந்தது., உடனே அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்தனர்.
மருத்துவர்கள் சோதனையில் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டான் என தெரியவருகிறது. மீதியுள்ள மூன்று பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் விபரங்கள் சரியாக தெரியவில்லை. கிள்ளை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்கள்.
- காளிதாஸ்