Skip to main content

எச்.ராஜாவை வெளுத்து வாங்கிய அறநிலையத்துறை பெண் ஊழியர்

Published on 19/09/2018 | Edited on 19/09/2018
Struggle against H. Raja



கோயில் ஊழியர்களை அவதூறாக பேசிய எச்.ராஜாவை கண்டித்து திருவாரூரில், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு, தியாகராஜ சாமி கோயில் பணியாளர்கள் மற்றும் உதவி ஆணையர் அலுவலகத்தின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
 

ஹெச்.ராஜாமீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். அப்போது பெண் ஊழியர் ஒருவர் எச்.ராஜாவை கண்டித்து பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
 

அந்த பெண் ஊழியர் பேசுகையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நம்ம துறையை பற்றி அவதூறாக பேசிக்கொண்டே வருகிறார். தொடர்ந்து நீண்ட நாட்களாக பேசி வருகிறார். 
 

நாமும் ஏதோ சரி, ரோட்ல போற நாயி கொறச்சிக்கிட்டு இருக்குன்னு பொறுத்துக்கிட்டு இருக்கிறோம். அது நேற்று இரவு வேகமாக கடிச்சிருச்சி. எப்படியின்னா, எச்.ராஜா தலைமறைவு தனிப்படை வைத்து போலீஸ் தேடுகிறது என பேப்பரில் நியூஸ் வருது. அந்த பேப்பரை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடந்த கூட்ட மேடையில் ஒருவர் காட்டுகிறார். அந்த மேடையில் எச்.ராஜா உள்பட எல்லோரும் உட்கார்ந்து சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
 

போலீஸ் பாதுகாப்போட இவர் மேடையில் அறநிலையத்துறையை பற்றி அசிங்கமாக பேசிக்கொண்டிருக்கிறார். அறநிலையத்துறை ஊழியர்கள் திருக்கோவில் நிலத்தை விற்பது மட்டுமல்லாமல் தன் வீட்டு பெண்களை விற்கிறார்கள் என்று அவதூறாக பேசியிருக்கிறார். இப்படி கீழ்த்தரமாக அசிங்கமாக பேசும் ஆளை இப்பத்தான் பார்க்கிறேன். 
 

இவர்தான் பாஜக தேசிய செயலாளராம். பாசிச பாஜக என்றால் என்ன என்பது நேற்று இரவு நீங்க எல்லோரும் பார்த்திருப்பீர்கள். நீதிமன்றத்தையும் கேவலமாக பேசுகிறார். காவல்துறையையும் கேவலமாக பேசுகிறார். காவல்துறையினர் பொறுமையாக இருப்பார்கள். ஆனால் எங்கள் வீட்டு பெண்கள் பொறுமையாக இருக்க மாட்டார்கள்.
 

இவர் தமிழக பெண்களை அசிங்கப்படுத்தி பேசுவாரு, அதையெல்லாம் கேட்டுக்கிட்டு நாங்கள் வேலைபார்த்துக்கிட்டு இருக்க முடியாது. எங்கள் உணர்வுகளை, எங்கள் தன்மானத்தை தூண்டும் விதமாக எங்களை கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்தி பேசிய எச்.ராஜாவை கைது செய்யும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிட போவதில்லை. 
 

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இவர் அறநிலையத்துறையை பற்றி கேவலமாக பேசி வருகிறார். நாங்களும் பொறுத்து பொறுத்துப்போய் இப்போது பொங்கி எழுந்துள்ளோம். தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையினர் போராட்டம் நடத்துகின்றனர். எச்.ராஜா மன்னிப்பு கேட்கும் வரை நம் வீட்டு பெண்களையும் வீதியில் இறக்கி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு பேசினார்.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.