Skip to main content

மோடி ஆட்சியில் நாடு குட்டிச்சுவராகி விட்டது!; மு.க.ஸ்டாலின் தாக்கு!!

Published on 31/01/2019 | Edited on 31/01/2019

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நாடு குட்டிச்சுவராகி விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். 


மக்களவை தேர்தலையொட்டி, மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற முழக்கத்துடன் திமுக, தமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக்கூட்டங்களை நடத்தி வருகிறது.

 

அதன்படி, சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பாகல்பட்டியில்  நேற்று (ஜனவரி 30, 2019) ஊராட்சி சபைக்கூட்டம் நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அந்தப் பகுதியில் நிலவும் அடிப்படை பிர ச்னைகள் குறித்தும் மக்களிடம் கேட்டறிந்தார்.

 

 STALIN

 

கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது: கிராமங்களில் ஊர £ட்சி சபைக்கூட்டம் நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது. முதன்முதலாக மக்கள் பிரதிநிதிகள், கிராமசபைக் கூட்டங்களில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர். குடவோலை  முறையில் ஆரம்பித்ததற்கான ஆதாரங்கள் உத்திரமேரூரிலும், கும்பகோணத்திலும் இன்றும் உள்ளன.

 

இந்த குடவோலை முறைதான், வாக்குச்சீட்டாக மாறி,  இப்போது வாக்கு இயந்திரமாக உருவெடுத்து இருக்கிறது.  நீங்கள் வாக்களித்து எம்பி, எம்எல்ஏக்களை தேர்வு செய்து, நாடாளுமன்றத்திற்கும், சட்டசபைக்கும் அனுப்புகிறீர்கள்.  அதேபோல் உள்ளூர் பிரச்னைகளை தீர்க்க, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்கிறீர்கள். அவர்கள் உங்கள் பிரச்னைகளை பேசி, அதற்கு தீர்வு க £ண வேண்டும். 

 

ஆனால், தற்போது தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளும்  இல்லை. ஆட்சியும் முறையாக நடக்கவில்லை. மத்தியிலும்,  மாநிலத்திலும் முறையாக ஆட்சி நடக்காததால் நாடு, திசை மாறி போய்க்கொண்டிருக்கிறது. மோடி ஆட்சியில் நாடு  குட்டிச்சுவராகி விட்டது. 

 

நீங்கள் இந்த ஊராட்சிசபைக் கூட்டத்திற்கு மிகுந்த  ஆர்வத்துடன் வந்திருக்கிறீர்கள். பெண்கள் டிவி சீரியலைக்கூட மறந்துவிட்டு வந்துள்ளனர். இதற்கு நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையே காரணம்.

 

அந்த நம்பிக்கையோடு வந்த உங்களை வரவேற்கிறேன். நான் பேசுவது முக்கியமல்ல. நீங்கள் பேசுவதுதான் முக்கியம். அதை கேட்பதற்கு இங்கு வந்துள்ளேன். 

 

சமீபத்தில் மேற்குவங்கத்தில் மம்தாபானர்ஜி நடத்திய  கூட்டத்திற்கு சென்றேன். அங்கு வந்த அனைத்துத்  தலைவர்களும், நீங்கள் எப்படி இவ்வளவு சிறப்பாக ஊராட்சிசபைக் கூட்டங்களை நடத்துகிறீர்கள் என்று வியப்புடன்  கேட்டனர். இதுவரை யாரும் இப்படி ஒரு கூட்டத்தை நடத்தியது இல்லை என்று அவர்கள் கூறியது பெருமையாக  இருந்தது.

 

ஆனால் இங்குள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நான்  இப்போது புதிதாக கிராமங்களுக்கு செல்வதுபோல் பேசி வருகிறார். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, தமிழகத்தில் நான் செல்லாத கிராமங்களே இல்லை.  என்னைப்போல் இதுவரை எந்த அமைச்சரும் கிராமங்களு க்கு சென்றதில்லை. இப்போது நான் தனியாக எந்த கிராமத்திற்குச் சென்றாலும் மக்கள், ஸ்டாலின் என்று ஓடி வருகிறார்கள். 

 

ஆனால் எடப்பாடி பழனிசாமி, போலீஸ்  துணையில்லாமல் தனியாக கிராமங்களுக்குச் சென்றால் மக்களுக்கு அடையாளம் தெரியாது.

 

ஒருவேளை, அப்படியே அடையாளம் தெரிந்தால் கொலைகார முதல்வர் என்றுதான் சொல்வார்கள். கொடநாட்டில் நடந்த கொலைகளுக்கு அவர் காரணம் என்பதால், அப்படி கூறுவார்கள். அவரை கொலைகார முதல்வர் என்று நான்  சொல்லவில்லை. 

 

கொடநாடு விவகாரத்தில் தன் மீது வீண்பழி சுமத்துவதாக நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்தார். அதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம்  மறுத்து, அதை உறுதிப்படுத்தி உள்ளது.

 

திமுக ஆட்சியின்போதுதான் நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், பசுமை மயான திட்டம் என்று ஏராளமான திட்டங்கள், கிராமங்களின் வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்டன. தற்போது எதுவுமே நட க்கவில்லை என்பதால்தான், நீங்கள் இந்த கூட்டத்திற்கு  திரண்டு வந்திருக்கிறீர்கள்.

 

குறைகளை மனுவாகவும், நேரிலும் தெரிவிக்கிறீர்கள். நிச்சயம் ஆட்சி மாறும். உங்கள் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.