Skip to main content

’எடப்பாடியின் பேச்சைக் கேட்டால் சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது’ - பாமக பாலு

Published on 31/07/2018 | Edited on 31/07/2018
balu


சமூக நீதி பேரவை மாநிலத் தலைவர் கே.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வன்னியர்கள் மீது திடீர்ப் பாசம் வந்து விட்டதைப் போல முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாடகமாடிக் கொண்டிருக்கிறார். வன்னிய மக்கள் நலனுக்காக  தமது அரசு தான் ஏராளமான நன்மைகளை செய்திருப்பதாகவும், வன்னிய மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி எதுவுமே செய்யவில்லை என்றும் சேலத்தில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் பேசும் போது கூறியிருக்கிறார்.

 

எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சைக் கேட்டால் சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது.

வன்னியர்களின் நலனுக்காக பாட்டாளி மக்கள் கட்சியும், மருத்துவர் ராமதாஸ் அவர்களும் என்னவெல்லாம் செய்தார்கள் என்பது வன்னிய சமுதாய மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதுபற்றியெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி பேசத்  தேவையில்லை.

 

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுதால், அதை அந்த ஆடு நம்பினால், அன்று அந்த ஓநாய்க்கு ஆடு விருந்தாகப் போகிறது. ஓநாய்களிடம் எம்மக்கள் விழிப்புடன் தான் இருக்கிறார்கள்... இருப்பார்கள். வன்னியர்களுக்காக கண்ணீர் விடும் எடப்பாடி பழனிச்சாமி வன்னியர்களுக்கு அப்படி என்ன தான் செய்து விட்டார்?

 

வன்னியர் சமுதாயத் தலைவர்களில் ஒருவரான ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்; அவருக்கு கடலூரில் மணி மண்டபம் அமைக்கப்படும்  என்று அறிவித்தது தான் வன்னியர் சமுதாயத்துக்கு பினாமி அரசு செய்த நன்மையாம். ராமசாமி படையாச்சியார் வன்னியர் சமுதாயத்தின் மரியாதைக்குரியத் தலைவர்; அவரது பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடுவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.


ஆனால், இந்த ஒரு செயலை செய்வதன் மூலம் வன்னியர்களின் அனைத்துத் தேவைகளும் நிறைவேறி விடுமா? இந்த ஒரு செயலை மட்டும் தான் வன்னியர்கள் எதிர்பார்த்தார்களா?

 

* வன்னியர்களின் முக்கியக் கோரிக்கை அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தான். அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மருத்துவர் அய்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 69% இட ஒதுக்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றமும் இதே கருத்தை தெரிவித்துள்ளது. அதை மதித்து தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அதன் மக்கள் தொகை அடிப்படையில்   இட ஒதுக்கீடு வழங்க பினாமி அரசு தயாரா?

 

* முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் நிலை என்ன? வன்னியர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டத்தில் எந்த விதமான முக்கியப் பதவிகளிலும் வன்னியர்கள் இருக்கக்கூடாது என்று கூறி அவர்களை பழிவாங்கி வருகிறாரே? இது தான் வன்னியர்களுக்கு செய்யும் நன்மையா?

* வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் சட்டக்கல்லூரி தொடங்குவதற்கான அனுமதியை கடந்த 11 ஆண்டுகளாக வழங்காமல் இழுத்தடித்ததும், சென்னை உயர்நீதிமன்றமே ஆணையிட்ட பிறகும் அனுமதி தராமல் உச்சநீதிமன்றம் வரை சென்றது தான் வன்னியர்களுக்கு செய்த நன்மையா?

* தமிழக அரசில் உள்ள  துறை செயலாளர் பதவிகளின் எண்ணிக்கை - 53. இந்த பதவிகளில் உள்ள வன்னியர்களின் எண்ணிக்கை -  0

* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மொத்தமுள்ள உறுப்பினர் பதவிகள்- 15. அவற்றில் வன்னியர்களின் எண்ணிக்கை - 0

* தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் எண்ணிக்கை- 21. அவற்றில் வன்னியர்களின் எண்ணிக்கை - 0.

* தமிழக காவல்துறையில் உள்ள  ஐ.ஜிக்கள் எண்ணிக்கை - 43 . அவற்றில் வன்னியர்களின் எண்ணிக்கை - 0

* தமிழக காவல்துறையில் உள்ள கூடுதல் டி.ஜி.பிக்கள் எண்ணிக்கை - 24. அவற்றில் வன்னியர்களின் எண்ணிக்கை -0

* தமிழக காவல்துறையில் உள்ள டி.ஜி.பிக்கள் எண்ணிக்கை - 06. அவற்றில் வன்னியர்களின் எண்ணிக்கை -01

 

*  தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் 20 பல்கலைக்கழகங்களுக்கு ஆளுனர் தான் வேந்தர். மீதமுள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான். ஆனால், அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு அனைத்துத் தகுதிகளையும் கொண்ட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த புஷ்பவனம் குப்புசாமியின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போது, அதை ஏற்க மறுத்தவர் இதே எடப்பாடி பழனிச்சாமி தான். அவருக்கு பதிலாக கேரளத்தைச் சேர்ந்த பெண்மணியைச் சேர்ந்தவரை நியமித்தவரும் இதே எடப்பாடி பழனிச்சாமி தான். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட துணைவேந்தராக வந்து விடக் கூடாது என்பதற்காக பல்வேறு துரோகங்களை செய்த எடப்பாடி தான் வன்னியர்களுக்கு நன்மை செய்வதாகக் கூறியிருக்கிறார்.

*  2013&ஆம் ஆண்டு எந்த குற்றமும் செய்யாத நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் குரு ஆகியோரை இந்த அரசு கைது செய்து சிறையில் அடைத்ததே. குருவை 4 முறை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்ததே. அப்பாவி வன்னியர்கள் 12 ஆயிரம் பேரை பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்ததே. இவை தான்  வன்னியர்களுக்கு அதிமுக அரசு செய்த நன்மைகளா?

 

*  வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த 135 பேரை குண்டர்கள் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்  சிறையில் அடைத்து கொடுமைப் படுத்தியதே ஜெயலலிதா அரசு. இது தான் வன்னியர்களுக்கு செய்த நன்மையா?

இராமசாமி படையாச்சியாருக்கு சிலை வைப்பது தொடங்கி வன்னியர் சொத்து அறக்கட்டளைத் தொடங்குவதாக அறிவிப்பது வரை அதிமுக அரசின் அனைத்து நாடகங்களுக்கும் பின்னணியில் இருப்பது மருத்துவர் ராமதாஸ் மீதான பயம் தான். மருத்துவர் அய்யாவின் கண்ணசைவு தான் எங்களுக்கு கட்டளை. எங்களின் அங்கீகாரம் அய்யா தான். எங்களுக்கு அனைத்தும் அய்யா தான்.

மருத்துவர் அய்யா கான மயில். எடப்பாடி பழனிச்சாமி வான்கோழி. கான மயில் செய்வதையெல்லாம் வான்கோழிகள் செய்ய நினைத்தால் என்னவாகும் என்பது விரைவிலேயே தெரியும். இவ்வாறு கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார். 

Next Story

“சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் தனியார் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்வது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்களவை தொகுதியில் மாநிலங்களுக்கான தற்போதைய தொகுதிக்கான இடங்கள் கடந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டால், சில மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெறவும், சில மாநிலங்கள் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை விட குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுரையை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாஜக ஏன் வரவே கூடாது?. தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாடு உட்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்?. சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்!. வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள். 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!. பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.