Skip to main content

விபத்துக்குள்ளான ஆட்சியர் சென்ற கார்..!

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

Sivagangai Collector car accident

 

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் ஒரு வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், இன்று (24.04.2021) சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன், காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்ய சென்றுகொண்டிருந்தார். அப்போது காளகண்மாய் எனும் பகுதியில், ஆட்சியர் சென்றுகொண்டிருந்த காரின் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்துள்ளது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கார் விபத்துக்குள்ளானதும், காரிலிருந்த உயிர் காக்கும் காற்று பை (பலூன்) செயல்பட்டதால் ஆட்சியருக்கு சிறு காயங்களே ஏற்பட்டன. 


 

சார்ந்த செய்திகள்