Skip to main content

ஐந்து கிராம மக்களின் குடிநீர் தேவையை போக்கும் ஒற்றை கை பம்பு; வரிசைகட்டி நிற்கும் மக்கள் வேதனை

Published on 05/05/2019 | Edited on 05/05/2019

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பன்மடங்காக அதிகரித்துள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் மக்களை வாட்டியெடுத்துவருகிறது. தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்து ஆடத்துவங்கிவிட்டது.

 

village

 

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களும் குடிநீர் பிரச்சினையால் அல்லல்படுகின்றனர். மாநகராட்சி, நகராட்சிகளில் குடிநீர் லாரிகள் மூலம் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் முயற்சியில் உள்ளனர்.

 

ஆனால் கிராமபுறங்களோ உள்ளாட்சி அமைப்புகள் இல்லாமல்போனதால் தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளையும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

 

இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம்  வேப்பத்தாங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் மக்களை பெருத்த அவதிக்கு உள்ளாக்கியுள்ளது. ஊராட்சி முழுவதும் உள்ள மக்களின் குடிநீர் தேவையை ஒரே ஒரு அடிபம்பு மட்டுமே தீர்த்து வைக்கிறது. மற்ற இடங்களில் உள்ள கை பம்புகளை பரிமாறிக்க ஆளிள்ளாமல் பாழடைந்து கிடக்கிறது.

 

அதோடு வேப்பத்தாங்குடியை சுற்றியுள்ள கிராமங்களான வஞ்சியூர், படுவைக்காடு, மாவூர், வயலுர், பரமாக்குடி உள்ளிட்ட  கிராமங்களில் உள்ள இந்த ஒற்றை அடிபம்பை மட்டுமே நம்பி உள்ளனர்.

 

"சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் வசதி இல்லாததால் ஒரு குடம் தண்ணீர் எடுக்க 2 கிலோ மீட்டர் தூரம் போகவேண்டியிருக்கு. மேலும் சாலை வசதி இல்லாததால் தடுமாறி விழுந்து காயப்படுவதோடு, எடுத்து வரும் தண்ணீரும் கீழே கொட்டி விடுகிறது ". என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

 

 

" வேலைக்கு செல்லும் ஆண்களும், சிறுவர்களும், பெண்களும் என அனைவரும் ஒரு குடம் தண்ணீர்க்காக தங்கள் வேலையை விட்டுவிட்டு தண்ணீருக்காக அலைகின்றனர்.

 

 

ஐந்து கிராம மக்களின் தாகத்தை இந்த ஒற்றை அடிபம்பு தணித்தாலும், தற்போது கோடை மழையும் இல்லாமல் போனதும், வெயிலின் தாக்கமும் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துவருகிறது. 

 

நாங்களாகவே போர் வசதிகள் செய்தாலும் நிலத்தடி நீர் உப்பாக இருக்கிறது, எங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்துவிட்டோம் ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மக்களின் அத்தியாவசிய தேவைகளில் முக்கியமான ஒன்றான குடிநீர் தேவையை தமிழக அரசு பூர்த்திசெய்ய ஏற்பாடு செய்துதர வேண்டும். என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.