Skip to main content

காதில் விஷம் ஊற்றி காதல் தம்பதி தற்கொலை! மயிரிழையில் உயிர் தப்பிய குழந்தைகள்!!

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

shocking incident in salem

 

ஆத்தூர் அருகே, மாமியார் மருமகள் மோதல் முடிவுக்கு வராததால், விரக்தி அடைந்த காதல் தம்பதியினர் காதில் விஷத்தை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொல்ல முயன்றபோது, சுதாரித்துக்கொண்டு தப்பி ஓடியதால் நல்வாய்ப்பாக அவர்கள் உயிர் பிழைத்தனர்.

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புங்கவாடியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (37). நெல் கதிரடிக்கும் வாகன ஓட்டுநராக இருந்தார். இவருடைய மனைவி சத்யா (33). கடந்த 13 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அபிநயா (13) என்ற மகளும், சஞ்சித் (11) என்ற மகனும் உள்ளனர்.

 

வேலை தொடர்பாக வேல்முருகன் அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று விடுவார். அப்போது, சத்யாவுக்கும் கணவரின் தாயார் தனலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மாமியார் மருமகள் பிரச்னை தீரும் வரை நான் வேலைக்குச் செல்வதில்லை எனக் கூறிய வேல்முருகன், கடந்த 2 மாதமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

 

shocking incident in salem

 

இதைப்பார்த்த தனலட்சுமி, “உன்னால்தான் என் மகனின் வாழ்க்கை வீணாகி, நிம்மதி இல்லாமல் போய்விட்டது” எனக் கூறியுள்ளார். பிப். 9ம் தேதியன்றும் மாமியார், மருகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சத்யா, கணவரிடம் முறையிடுள்ளார். அதன்பேரில் தன் தாயாரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தார். ஆனால், தாயாரோ மகனையும் திட்டியுள்ளார்.

 

தன்னைப் பெற்ற தாயின் பக்கம் நிற்பதா, பெற்றோரை உதறிவிட்டு தன்னையே நம்பி வந்த மனைவியின் பக்கம் நிற்பதா எனத் தெரியாமல் வேல்முருகன் கலங்கித் தவித்தார். இருதலைக்கொள்ளி எறும்பு போல தவித்து வரும் கணவனின் நிலை கண்டு, சத்யாவும் மனம் உடைந்தார். முடிவே இல்லாமல் தொடரும் இந்த நிம்மதியற்ற வாழ்க்கை தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

 

இதையடுத்து பிப். 9ம் தேதியன்று மாலை, அவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மஞ்சினி அருகே உள்ள வால் கரடு பகுதிக்குச் சென்றனர். சத்யாவும், வேல்முருகனும் தங்கள் காதுகளில் விஷத்தை ஊற்றிக்கொண்டனர். குழந்தைகளுக்கும் விஷத்தைக் கட்டாயப்படுத்திக் குடிக்க வைத்துள்ளனர். கொஞ்சம் குடித்தபோது கசப்பாக இருந்ததால், அவர்கள் பெற்றோரை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

 

குழந்தைகள் இருவரும் அளித்த தகவலின்பேரில் உறவினர்கள் மற்றும் ஆத்தூர் காவல்நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். ஆனால் அதற்குள் சத்யாவும், வேல்முருகனும் இறந்துவிட்டனர். இதைப்பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

காவல்துறையினர் சடலங்களை மீட்டு, உடற்கூராய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறிதளவு விஷம் குடித்திருந்த குழந்தைகள் இருவரும் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். குடும்பத் தகராறில் கணவன், மனைவி இருவரும் காதில் விஷம் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.