Skip to main content

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளி தப்பியோட்டம்-சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி!

Published on 26/03/2022 | Edited on 26/03/2022

 

Shocked by the release of the convict escape-CCTV footage

 

நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு அழைத்துச் சென்றபொழுது காவலர்களைத் தள்ளிவிட்டுவிட்டு கைதி தப்பிச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி மாவட்டம் பாலகரையைச் சேர்ந்தவர் தர்மராஜ். தர்மராஜ் மீது தஞ்சை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் வீடு புகுந்து திருடிய வழக்குகள் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் இவர் மீது ஐந்து வழக்குகள் உள்ள நிலையில், புதுக்கோட்டை சிறையிலிருந்து தஞ்சை நீதிமன்றத்திற்கு போலீசார் தர்மராஜை நேற்று மாலை அழைத்துச் சென்றார்கள். ஜெ.எம்1, ஜெ.எம் 2 உள்ளிட்ட இரண்டு நீதிமன்றங்களில் தர்மராஜை ஆஜர்படுத்திவிட்டு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பேருந்தில் ஏற்றப்பட்ட குற்றவாளி தர்மராஜ், உடன் இருந்த இரண்டு போலீசாரை தள்ளிவிட்டிவிட்டு ஓடிச் சென்றான். இந்நிலையில் குற்றவாளி தர்மராஜ் போலீசாரின் பிடியிலிருந்து தப்பிவிட்டு ஓடும் சிசிடிவி காட்சி, தொடர்ந்து போலீசார் ஓடும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்