
தேனி மாவட்டத்தில் சாலையில் மூன்று மாத கரு கீழே கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கண்டமனூர் கிராமத்தில் சாலையில் மூன்று மாத கரு சாலையில் கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கருவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் கருவை சோதித்த மருத்துவர்கள் கரு உருவாகி மூன்று மாதம் ஆகி இருக்கலாம் எனக் கூறினர். அந்தக் கரு ஆணா பெண்ணா என்பதைக் கண்டறியும் பணிகளும் நடந்து வருகிறது. கருவை சாலையில் வீசிவிட்டு சென்ற நபர் யார் எனக் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அருகில் உள்ள கட்டடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களைக் கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.