Skip to main content

’எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு இது கஷ்டமான பொங்கல்’-செந்தில்கணேஷ், ராஜலட்சுமி உருக்கம்

Published on 14/01/2019 | Edited on 14/01/2019
r

    

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மறைந்த தோழர் எஸ்.பி.முத்துக்குமரன் நினைவு மன்றத்தின் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள், மரக்கன்றுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சுமார் 15 ஆயிரம் மாணவர்களுக்கு காலணிகள் வழங்கும் நிகழ்சியின் தொடங்கவிழா மற்றும் பொங்கல் விழா நெடுவாசல் கடைவீதியில் உள்ள முத்துக்குமரன் கலையரங்கத்தில் ஓய்வு டி.எஸ்.பி மாணிக்கவாசகம் தலைமையில் நடந்தது. 

 

n

 

இந்த விழாவில் மரம் வளர்ப்போர் சங்கம் தங்க கண்ணன், அட்மா காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக நாட்டுப்புற கலைஞர்கள் செந்தில்கணேஷ், ராஜலெட்சுமி தம்பதிகளும் கலந்து கொண்டு,  எங்களை போன்ற நாட்டுப்புற கலைஞர்களை வெளியுலகிற்கு அடையாளம் காட்டியது இந்த நெடுவாசல் போராட்டக் களம். வெளிநாட்டிலும் இங்கு பாடிய அந்த போராட்ட பாடல் ஒலித்திருக்கிறது என்பதை மற்றவர்கள் சொல்ல கேட்ட போது மகிழ்ச்சியாக இருந்தது. அதன் பிறகு எங்களை வெளிக்காட்டியது விஜய் டி.வி. எல்லாம் உங்களைப் போன்றோர்களின் பேராதரவால்தான் என்று பேசிவிட்டு போராட்டக் களத்தில் கர்ப்பிணியாக நின்று பாடிய பாடலை பாடிவிட்டு ஏ மச்சான் பாடலை பாடி திரண்டிருந்த மக்களின் கரகோஷங்களை ஏற்றனர். 

 

n

 

பிறகு செந்தில்கணேஷ் கூறும் போது.. எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு இது கஷ்டமான பொங்கல் என்று தான் சொல்ல வேண்டும். கஜாவின் தாக்கத்தால் விவசாயத்தை இழந்து மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் நம்பிக்கையுடன் பயணம் செய்கிறோம். அதனால் தான் இந்த ஆண்டு நல்லதாக அமையும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. கஜா பாதிப்பு பற்றி விவசாயிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் பாடல்களை விரைவில் வெளியிடுவோம் என்றார்.

 

தொடர்ந்து பேசிய ராஜலெட்சுமி.. இது கசப்பான பொங்கல் என்று சொல்ல முடியாது. விவசாயிகளுக்கு பெரிய இழப்பு தான். ஆனால் நம் விவசாயிகள் மண்ணை பொன்னாக்கும் வல்லமை படைத்தவர்கள். அந்த சக்தி இன்றும் நம் விவசாயிகளிடம் உள்ளது. தன்னம்பிக்கை இருப்பதால் தான் இப்போது மரங்களை வளர்க்க கன்றுகளை நடத் தொடங்கிவிட்டார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும்.  இப்போது தொடங்கியுள்ள மரக்கன்று நடுதல் விரைவில் வளரும் நம் விவசாயிகள் எழுவார்கள். அதனால் இந்த பொங்கலும் அனைவருக்கும் இனிப்பான பொங்கல் தான். விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்கள் பயணிப்பார்கள் என்றார். 
        


 

சார்ந்த செய்திகள்

Next Story

“நடிகர்களின் பின்னே தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஓடுகிறார்கள்” - பழ. கருப்பையா வேதனை

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

 Pala Karuppiah Speech at license audio and Trailer launch

 

"எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது" படத்தை இயக்கிய கணபதி பாலமுருகனின் அடுத்த படம் லைசென்ஸ். இப்படத்தில் நாட்டுப்புற கலைஞர் ராஜலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழ.கருப்பையா பேசியதாவது, “இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொன்னபோது தான் நான் நடிக்கத் தயாரானேன். ஏனென்றால் பெண்களுக்காகப் போராடும் ஒரு பெண்மணியைப் பற்றிய கதை திரையில் வருவதே அபூர்வம். மேலும் கதாநாயகியாக ராஜலட்சுமி நடிக்கிறார் என்று சொன்னவுடன் நான் கொஞ்சம் வியந்து போனேன். ஏனென்றால் ஒரு தயாரிப்பாளர் ஒரு இளம் வயது கவர்ச்சியான கதாநாயகியை வைத்துத்தான் இப்படிப்பட்ட கதையை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த கதையின் மீது பெரிய நம்பிக்கையை வைத்து புது கதாநாயகியைக் கொண்டு படத்தை தயாரிக்க முன்வந்ததே இந்த படத்திற்கு கிடைத்த வெற்றி.

 

பாடலின் வழியாகவோ, நாட்டியத்தின் வழியாகவோ, ஒரு திரைப்படத்தின் வழியாகவோ நல்ல கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். அதேபோல் இந்த படத்தின் கதையின் வழியாக ஒரு நல்ல கலையை மக்களுக்கு கொண்டு செல்ல கடமைப்பட்டுள்ளோம். மேலும் இந்த இயக்குநர் கணபதி பாலமுருகன் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அழகாக இயக்கி இருந்தார். ஒரு காட்சியில் இப்படித்தான் நடிக்க வேண்டும் என பின்புல கதையை எடுத்துரைத்து அந்த காட்சியில் என்னை தொடர்புபடுத்திக் கொண்டு அழகாக நடிக்க காரணம் இயக்குநர் தான். என்னுடைய காட்சி நடித்து முடித்துக் கொண்டு வெளியூருக்கு செல்ல முற்படும்போது என்னை துரத்திக் கொண்டு வந்து மீதி பணத்தை செக்  வாயிலாக கொடுத்தார் தயாரிப்பாளர். 

 

மேலும் இப்போதைய சூழ்நிலையில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்  பெரிய பெரிய நடிகர்கள் பின்னால் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஓடிக் கொண்டிக்கின்றனர். ஆனால் இன்னும் சில வருடங்களுக்குப் பின்பு நீங்கள் சொல்லும் பெரிய நடிகர்கள் காணாமல் போய் விடுவார்கள். அந்த படமும் வந்த இடம் தெரியாமல் போய்விடும். ஆனால் ஒரு நல்ல கதை பற்பல ஆண்டுகளுக்கு பின்பும் காலத்தை வென்ற திரைப்படமாக இயங்கும். அந்த வகையில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்த லைசென்ஸ் திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

 

 

Next Story

“கிராமிய பாடகர் செந்தில் கணேஷ் ஏன் கலந்துகொள்ளவில்லை” - ராஜலட்சுமி விளக்கம்!

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

 Rajalakshmi senthil Speech - License Movie Audio and Trailer launch

 

தனியார் தொலைக்காட்சி பாட்டுப் போட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த கிராமிய பாடகர் ராஜலட்சுமி முதன்மைக் கதாபாத்திரமாக நடித்த லைசென்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் கலந்துகொண்ட ராஜலட்சுமி பேசியதாவது, “எனக்கு முதல் பிரசவத்தின் மூலம் பெற்ற குழந்தையை கையில் தாங்கிய மகிழ்ச்சியை போலவே இந்த லைசென்ஸ் படத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. மேலும், என்னுடைய முதல் பெரிய நன்றியை இந்த படத்தின் இயக்குநரான கணபதி பாலமுருகனுக்குத்தான் தெரிவிக்கிறேன். ஏனென்றால் தமிழ் சினிமா துறையில் இத்தனை நடிகைகள் இருக்கின்றபோது என்னை தேர்வு செய்தது எனக்கு புதுமையாக இருந்தது. இயக்குநர் முதலில் எனக்கு படத்தின் கதையை சொன்னபோது என் நாற்காலியின் நுனியில் அமர்ந்துதான் கேட்டேன். அந்த அளவுக்கு கதை மிகவும் பிரமாதமாக இருந்தது. மேலும், இந்தக் கதையின் முதன்மைக் கதாபாத்திரமாக என்னைத் தேர்வு செய்தது என்னை இன்னும் ஆச்சரியமாக்கி இருந்தது.

 

என் வாழ்வில் கற்பனை கூட செய்ய முடியாத கதாபாத்திரத்தில் தேர்வு செய்தது இயக்குநரின் நம்பிக்கையின் மீது எனக்கு இன்னும் மரியாதை ஏற்பட்டது. இந்த படத்தின் தயாரிப்பாளரான ஜீவானந்தம் அவர்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை அலாதியானது. இந்த நிகழ்ச்சிக்கு என் கணவர் செந்தில் வரமுடியாததுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். யாரும் தப்பாக நினைக்க வேண்டாம். ஏனென்றால் எங்களின் பிரதானமான நாட்டுப்புற பாடலில் தான் எங்களுக்கு முழுக் கவனம் இருக்கும். மேலும் இந்த மே மாதம் முழுவதும் எங்களுக்கு நிகழ்வு இருந்து கொண்டே இருக்கும். அதனால் தான் இந்த நிகழ்ச்சிக்கு நான் மட்டும் வந்தேன். என்று கூறினார்.