Skip to main content

ஆண்மைக்காகக் கடத்தப்படும் கடல் அட்டை, கடல் பல்லிகள்..!!!

Published on 13/09/2018 | Edited on 13/09/2018

ஆண்மை விருத்திக்காகவும், மருந்துக்காகவும் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த கடல்வாழ் உயிரிகளான கடல் அட்டைகளையும், கடல் பல்லிகளையும் பறிமுதல் செய்தததோடு கடத்தலில் ஈடுப்பட்டவரையும் கைது செய்துள்ளது மாவட்ட வனத்துறை.

 

sea

 

ராமநாதபுரம் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள மன்னார்வளைகுடா பகுதி கடல் வாழ் உயிரினங்களின் சொர்க்கப்பூமியாகும். இங்கு தான் அரிய வகை கடல் உயிரிகளோடு கடல் அட்டை, கடல் பல்லி, கடல் குதிரை போன்ற உயிரினங்கள் ஏராளமாக வாழ்கின்றது. இதில் கடல் அட்டை ஆண்மை விருத்திக்கானது என யாரோ ஒருவர் கொளுத்திப் போட கடல் அட்டைகளை பிடித்து, கடத்தல் தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றனர் ராமநாதபுர மாவட்டத்துக்காரர்கள். பொதுவாக கடல் அட்டைக்கென தனி வலை எதுவும் கிடையாது. மீன்களோடு வலையில் சிக்கிக் கொள்ளும் இந்தக் கடல் அட்டை பிடிப்பட்டவுடேன் இறந்து விடும் தன்மைக் கொண்டது. உயிருடன் இல்லாத இந்தக் கடல் அட்டையை கடலுக்குக் கொண்டு வந்தாலே, " ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதும் வழக்கமான ஒன்று." என்பதால் எந்த மீனவர்களும் இதனைக் கொண்டு வருவதில்லை. கடத்தல் தொழிலில் ஈடுபடுவர்கள் பணத்தாசையைக் காட்டி மீனவர்களை கைக்குள் வைத்துக் கொண்டு கடல் அட்டையை கடத்துகின்றது குறிப்பிடத்தக்கது. இதற்காக ஆங்காங்கே வனத்துறையிடம் கைதாவதும் வழக்கமான ஒன்று.

 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக் கடற்கரைச்சாலையில் மணக்குடி விலக்கு அருகே வந்துக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை சந்தேகப்பட்டு சோதித்தனர் வனவர் சுதாகர் தலைமையிலான  ஜோசப், செல்வராஜ் மற்றும் விஜயபாஸ்கர் உள்ளிட்ட வனத்துறை டீம். சோதனையில் தடைச்செய்யப்பட்ட 11 கிலோ கடல் அட்டைகளும், கடல் பல்லிகளும் இருப்பது தெரியவர வாகனத்தில் வந்த தேவிப்பட்டிணத்தைச் சேர்ந்த முகம்மதுஅலியை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

 

"கடல் அட்டைக்கும் ஆண்மைக்கும் அறிவியல் பூர்வமாக எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் இந்தக் கடத்தல் தொடர்கதையான ஒன்று." என்கின்றனர் வனத்துறையினர். கடத்தல்காரர்களும் அவர்களுக்கு உதவிபுரியும் மீனவர்களும் செவிமடுப்பார்களா..?

சார்ந்த செய்திகள்

Next Story

கொதிக்கும் சாம்பாரில் விழுந்தும் தப்பிய சிறுவன்; உயிரைப் பறித்த அறுவை சிகிச்சை 

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
The boy who fell into the boiling sambar and escaped; Surgery that took life

கொதிக்கும் சாம்பாரில் தவறுதலாக விழுந்த சிறுவன் தழும்பு நீக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் மதன்(3). செல்வம் வீட்டுக்கு அருகிலேயே உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி கடையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் மதன், ஹோட்டலில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் தவறுதலாக விழுந்துள்ளார். அலறித்துடித்த மதனின் குரலைக் கேட்ட கடை ஊழியர்கள் உடனடியாக மதனை காப்பாற்றினர். இதில் சிறுவனின் வலது கை வெந்து போனது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மதன் மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தான்.

தொடர்ந்து மதனின் கை பகுதியிலிருந்த தீக்காய தழும்புகளை சரி செய்ய வேண்டும் என பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர் அனுமதித்துள்ளனர். தீக்காய தழும்பு நீக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதை ஒப்புக் கொண்ட பெற்றோர்  சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென சிகிச்சையின்போது சிறுவன் மதன் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோர் தரப்பில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை அளிக்காததால் மகன் இறந்து விட்டதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் இறந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பிழைத்த சிறுவன் அதனால் ஏற்பட்ட தீக்காய தழும்புகளை சரி செய்ய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார்.