Skip to main content

மணல் லாரி - அரசு பேருந்து மோதியதில் பேருந்து டிரைவர் பலி

Published on 20/09/2017 | Edited on 20/09/2017
மணல் லாரி - அரசு பேருந்து மோதியதில் பேருந்து டிரைவர் பலி


 
வேலூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள பின்னலூர் கிராம பகுதியில் அரசு பேருந்து சென்றபோது, வடலூரை நோக்கி வந்த மணல் லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அரசு பேருந்து டிரைவர் விஜயகுமார் (வயது 56) சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயத்துடன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  இது சம்பந்தமாக சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

-சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்