Skip to main content

திருவாரூரில் திருவிக கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்

Published on 16/10/2018 | Edited on 16/10/2018
thiru

 

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர் மாரிமுத்துவை மீண்டும் சோ்க்க வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் துறை மாணவன் மாரிமுத்து , மாணவர் அமைப்பின் நிர்வாகியாக உள்ளார். இவர் தலைமையில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாணவர்களை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும் கல்லூரி நடத்த இடையூராக  மாரிமுத்து செயல்படுவதாக கல்லூரியில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டார்.

 

இந்த தகவல் அறிந்த கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சியடைந்து நீக்கப்பட்ட மாணவர் மாரிமுத்துவை உடனடியாக கல்லூரியில் சேர்க்க வேண்டும் என முறையிட்டனர்.  ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து இன்று 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

போராட்டத்தின் போது மாணவர் மாரிமுத்துவை உடனடியாக கல்லூரியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் மாணவர் மாரிமுத்துவை கல்லூரியில் சேர்க்கும் வரை மாணவர்களின் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட
மாணவர்கள்  தெரிவித்தனர்.  இதனிடையே காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு சாலை மறியல் போராட்டத்தை கைவிட்ட திருவாரூர் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தையில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.