Skip to main content

25 அடி ஆழ உறைகிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

Rescue of an old woman who fell into a 25 feet deep casing well

 

25 அடி ஆழம் கொண்ட உறைகிணற்றுக்குள் 65 வயது மூதாட்டி ஒருவர் தவறி விழுந்த நிலையில் பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் சென்னை நெற்குன்றம் அருகே நிகழ்ந்துள்ளது.

 

நெற்குன்றத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற 65 வயது மூதாட்டி கவனக்குறைவு காரணமாக நான்கு அடி விட்டம், 25 அடி ஆழமும் கொண்ட உறைகிணற்றில் தவறி விழுந்தார். உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் பல மணி நேரம் போராடி கயிறு மூலமாக இறங்கி மூதாட்டி லட்சுமியை மீட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்