Skip to main content

“பயணிகளை அழைத்து செல்ல வரும் உறவினர்கள் 5 மணி நேரம் தாமதமாக வர வேண்டும்” - விமான நிலைய இயக்குநர்!

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

Relatives arriving to pick up passengers must arrive 5 hours late

 

உலகத்தை அச்சுறுத்திவந்த கரோனா வைரஸ் தற்போது உருமாறி ஒமிக்ரான் என்ற புதிய வகை வைரஸாகப் பரவ ஆரம்பித்துள்ளது. உலக நாடுகள் தற்போது மீண்டும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கியுள்ள நிலையில், சர்வதேச வழித்தடங்களைத் தற்காலிகமாக மூட பல நாடுகள் முன்வந்துள்ளன. ஆனால் இதுவரை இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், சர்வதேச எல்லைகளை மூடாமல் உள்ளது.

 

ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் புதிய கரோனா விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (02.12.2021) காலை சிங்கப்பூரிலிருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளை முறையாக சோதனை செய்து, சோதனை முடிவுகள் வெளிவந்த பின்பு மட்டுமே அவர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

 

இந்தப் புதிய கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகள் குறித்து திருச்சி விமான நிலைய இயக்குநர் தர்மராஜ் கூறுகையில், “வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைதரும் பயணிகள் ஒவ்வொருவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு, பரிசோதனை முடிவுகள் வந்த பின்பு வெளியேற அனுமதிக்கப்பட்டுவருகின்றனா்.

 

இன்று காலை சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த இரண்டு விமானங்களில் 282 பயணிகள் வந்து சேர்ந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு, மூன்றரை மணி நேரத்தில் முடிவுகள் பெறப்பட்டு பயணிகள் வெளியே அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும், சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளை அழைத்துச் செல்லும் உறவினர்கள் 5 மணி நேரம் தாமதமாக வர வேண்டும்” என்று விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.